districts

கரும்புப் பயிரில் மஞ்சள் நோய்த் தாக்குதல் 300 ஏக்கர் பாதிப்பு: இழப்பீடு வழங்க வேண்டுகோள் பாபநாசம் எம்எல்ஏ அறிக்கை

பாபநாசம், ஜூலை 27- மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் கபிஸ்தலம், சத்தியமங்கலம், கணபதி அக்ரஹாரம், மணலூர், வீர மாங்குடி, தேவன்குடி, சோமேஸ்வர புரம் மற்றும் அதன் சுற்று வட்டார கிரா மங்களில் சுமார் 1000 ஏக்கரில் விவ சாயிகள் கரும்பு சாகுபடி செய்து வரு கின்றனர். சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பு வதற்காகவும், வெல்லம் காய்ச்சுவதற் காகவும் பல ஆண்டுகளாக கரும்பு சாகு படி செய்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதத்தில் நடவாக வும், மறுதாம்பாகவும் பயிரிட்டு, தற் சமயம் 5 மாத பயிராக இருக்கும் நிலை யில், கரும்புப் பயிர்களில் மஞ்சள் நோய்த் தாக்கியுள்ளது. இதனால் அந்த  பயிர்கள் கருகியும், சிறுத்தும் வளராமல் நின்று விட்டன. பூச்சிக் கொல்லி மருந்துகளாலும் கட்டுப்படுத்த இயலாத நிலையில், இந்த நோய் தாக்கு தல் அமைந்துள்ளது.  இதனால் சாகுபடி செய்துள்ள ஆயிரம் ஏக்கரில் சுமார் 300 ஏக்கர் கரும்பு  பயிர்கள் இந்த நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நோயின் தாக்கம் மற்ற பகுதிகளில் பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக, நோய்த் தாக்குதலுக்கு உள்ளான 300 ஏக்கர் கரும்புப் பயிர் களை டிராக்டர் மூலம் உழுது அவற்றை  அழிக்கும் பணியை விவசாயிகள் செய்து வருகின்றனர். ஒரு ஏக்கருக்கு கரும்பு சாகுபடி செய்வதற்கு ரூ.50 ஆயிரம் செல விடப்படுகிறது. தற்போது நோய்த்  தாக்குதல் காரணமாக அழிக்கப்பட் டுள்ள கரும்புப் பயிர்களுக்கு ஏக்க ருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க  வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயி கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  வேளாண் துறை அலுவலர்கள், திருச்சி சிறுகமணி கரும்பு ஆராய்ச்சி மையத்தின் பூச்சியியல் நிபுணர் மற்றும் ஒரத்தநாடு, ஈச்சங்கோட்டை வேளாண் அறிவியல் கல்லூரி மற்றும்  ஆராய்ச்சி மையத்தின் பேராசிரி யர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட பயிர்களை நேரடியாக ஆய்வு செய்துள்ளனர்.   எனவே விவசாயிகளின் கோரிக் கையை ஏற்று நோய்த் தாக்குதல் கார ணமாக அழிக்கப்பட்டுள்ள கரும்புப் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். நெற்பயிர்களுக்கு இருப்பது போல, கரும்பு பயிறுக்கும் காப்பீடு செய்யும் நடைமுறையை எளிதாக்க வேண்டும் என தமிழக முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.