districts

‘ஹெல்மெட்’ அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

திருநெல்வேலி, ஜன.27- நெல்லை மாநகர் பகுதி களில் மோட்டார் சைக்க ளில்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். இல்லையென்றால் அப ராதம் உள்ளிட்ட கடும் நட வடிக்கைகள் எடுக்கப் படும் என புதிதாக பொறுப் பேற்ற போது காவல் ஆணை யர் ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்தார்.  இதனைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு மாநகர் பகுதி முழுவதும் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் வாகன சோத னையில் ஈடுபட்டு விதிமுறை களை மீறுபவர்களையும், ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களையும் கண்ட றிந்து அபராதம் விதித்தனர். 2 வாரங்களாக கடுமையாக பின்பற்றப்பட்ட இந்த வாகன சோதனை கடந்த சில நாட்களாக குறைந்தி ருந்தது. இந்நிலையில் வெள்ளிக் கிழமை மீண்டும் மாநகர் பகுதிகளில் கடும் சோதனை மேற்கொள்ளப் பட்டது.
50 இடங்களில் சோதனை
அதன்படி பழைய பேட்டை சோதனை சாவடி, வழுக்கோடை முக்கு, நயி னார்குளக்கரை, டவுன் ஆர்ச், மாநகராட்சி அலுவ லகம், சந்திப்பு ஈரடுக்கு மேம் பாலம் கீழ் பகுதி, வண்ணார் பேட்டை, முருகன் குறிச்சி, பாளை மார்க்கெட், சமா தானபுரம் உள்ளிட்ட 50 இடங்களில் வெள்ளியன்று காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்றவர் களை மறித்து அபராதம் விதித் தனர். ரூ.100 முதல் ரூ.1,000 வரை வாகன ஓட்டிகளிடம் அபராதமாக வசூலித்தனர். இதேபோல் வாகனத்தில் முறையாக நம்பர் பிளேட் பொருத்தாதவர்கள். விதி முறைகளை மீறியவர்கள், 2-க்கும் மேற்பட்டோர் மோட் டார் சைக்கிளில் சென்றவர் கள் உள்பட விதிகளை மீறி சென்றவர்களை பிடித்து அப ராதம் விதித்தனர்.