தேனி, ஜூன் 15- போடி அருகே காட்டாற்று வெள்ளத் தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேர் மீட்கப் பட்ட நிலையில் மேலும் மின் வாரிய ஒப்பந்த ஊழியர் சடலமாக மீட்கப்பட் டார். போடியை சேர்ந்தவர் குமரேசன் (32), கோகுல் (20), பாண்டியராஜன், தேனி சுக்குவாடன்பட்டியை சேர்ந்த சுரேஷ் (27) உள்ளிட்ட 14 பேர் மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்களாக பணி யாற்றி வருகின்றனர். 14 பேரும் பணி முடிந்து மாலையில் போடி அருகே ஊத்தாம்பாறை வனப்பகுதியில் சின் னாறு எனப்படும் ஊத்தாம்பாறை ஆற் றுப் பகுதியில் குளிக்க சென்றுள்ளனர். ஆற்றின் ஒரு பகுதியில் குளிக்கும் போது திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில் குமரேசன், கோகுல், பாண்டியராஜன் ஆகியோர் தணணீரில் அடித்துச் செல்லப்பட்டு ஆற்றின் ஒரு கரையிலும், மற்ற 10 பேர் ஒரு கரையி லும் ஏறி தப்பித்தனர். ஆற்றின் நடுப்பகு தியில் குளித்துக் கொண்டிருந்த சுரேஷ் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண் டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சக்தி வேல் தலைமையில் தீயணைப்பு வீரர் கள், வனத்துறையினர், காவல்துறை யினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆற்றின் ஒரு கரையில் இருந்த குமரேசன், கோகுல், பாண்டியராஜன் ஆகியோரை கயிறு மூலம் மீட்டனர். ஆற்றில் அடித் துச் செல்லப்பட்ட சுரேஷை இரவு 8 மணி வரை தேடியும் கிடைக்கவில்லை. இதை யடுத்து புதன்கிழமை காலையில் தேடும் பணியை தொடர்ந்த தீயணைப்பு துறை யின் கமாண்டோ வீரர்கள், ஆற்றில் பாறைகள் நிறைந்த பகுதியில் சடலம் இருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் சடலத்தை மீட்ட தீய ணைப்பு துறையினர் காவல்துறையில் ஒப்படைத்தனர். அதன் பேரில் போடி குரங்கணி காவல் துறையினர் விசா ரித்து வருகின்றனர்.