districts

img

சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலை.யில் உலகளவிலான கணிதவியல் மாநாடு

கும்பகோணம் மார்ச் 24  கும்பகோணம் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக சீனிவாச இராமானுஜன் மையத்தில் உலக அளவிலான கணிதவியல் மற்றும் கணிதவியலில் தொழில்நுட்பத்துறை பயன்பாடுகள் மாநாட்டின் தொடக்க விழா நடைபெற்றது மலேசியா டெரெங்கானு பல்கலை.பேரா. கோபிதாஸன் ருத்ருசாமி மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினார். அவர் தனது உரையில்,  “உலக  வளர்ச்சி தொழில் நுட்பத்தை நம்பி இருக்கிறது. தொழில் நுட்ப வளர்ச்சி கணிதவியல் ஆராய்ச்சியை நம்பியுள்ளது” என்றார். சென்னை ஐஐடி கணிதவியல் பேராசிரியர் பொன்னுசாமி மாநாட்டு மலரை வெளியிட்டுப் பேசுகையில், “ஆராய்ச்சி மேம்படுவதற்கு நம் நாட்டில் அதிக நிறுவனங்கள் உள்ளன. எனவே நாம் வெளி நாடு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை” என்றார். சீனிவாச இராமானுஜன் மையப்புலத்தலைவர்  இராமசாமி தலைமையுரையாற்றினார். மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்  நரசிம்மன் அனைவரையும் வரவேற்றார். இணை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் நன்றி கூறினார். இம் மாநாட்டின் தொடக்க நாளான வெள்ளிக்கிழமை மலேசியா, சீனா, தைவான் மற்றும் இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களின் கணிதவியல் பேராசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் கலந்து கொண்டு ஆராய்ச்சி தொடர்பாக விவாதித்தனர். மாநாடு சனிக்கிழமையும் நடைபெறுகிறது.