districts

பாதுகாப்பின்றி சேதமாகும் நெல் மூட்டைகள்

தஞ்சை, நாகை, திருவாரூர், மயி லாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங் களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல், சேமிப்பு கிடங்கு களில் உரிய பாதுகாப்பின்றி வைக்கப்பட்டுள் ளதால் அவை அனைத்தும் சேதமாகி வரு கின்றன. மேலும் இந்த நெல்லை அரவைக்கு  எடுத்துக்கொள்ள அரிசி ஆலை உரிமை யாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர். குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த குறுவை சாகுபடியின் போது 4.50  லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப் பட்டது. இது அறுவடை நேரத்தில் தொடர் மழை பெய்ததால் பல இடங்களில் மழை நீரில் நெல் மணிகள் மூழ்கின. இதனால் நெல்  மணிகள் வயலிலேயே முளைத்தன. எஞ்சிய வற்றை அறுவடை செய்தபோதும் நெல்லின் ஈரப்பதம் அதிகரித்து காணப்பட்டது. ஆனால் கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதத் திற்கு குறைவான ஈரப்பதம் உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டன. இத னால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். கடந்த கொள்முதல் பருவத்தில் தஞ்சா வூர் மாவட்டத்தில் 10.54 லட்சம் டன், திருவா ரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 15 லட்சம் என நெல் கொள்முதல் செய்யப் பட்டது. இந்த நெல் மூட்டைகள் டெல்டா மாவட்டங்களிலுள்ள 13 உள் சேமிப்பு கிடங்கு கள், 66 திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. இந்நிலை யில் பல்வேறு திறந்தவெளி சேமிப்பு கிடங்கு களில் வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் தற்போது சேதமாகி வருகின்றன.

திறந்த வெளி கிடங்குகளில் பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் சேதமடைந்து நெல் மணி கள் சிதறி ஆங்காங்கே குவியல் குவியலாக காணப்படுகிறது. சேமிப்பு கிடங்குகளை இன்னும் கூடுதலாக ஏற்படுத்துவதற்கு அரசு  முயற்சித்தால் பாதிப்புகளை தவிர்த்திட முடியும்.  இன்னொருபக்கம் இந்த நெல்லை அர வைக்கு எடுத்தால் அரசு கூறியுள்ள விகி தாச்சாரத்தில் அரிசியை தரமுடியாது என்ப தால் தனியார் அரிசி ஆலை உரிமையா ளர்கள் நெல்லை அரவைக்கு எடுக்க தயக்கம் காட்டுகின்றனர். இது மட்டுமின்றி, சில கொள்முதல் நிலையங்களில் குறுவை நெல்லை கொள்முதல் செய்வதற்காக எடுக்கப்பட்டு ஈரப்பதம் காரணமாக பிறகு கொள்முதல் செய்யலாம் என்று அப்படியே  அடுக்கி வைத்துள்ளனர். இதனால் தேங்கி யுள்ள அந்த குறுவை நெல்லை இன்னும் எடுக்கவில்லையே என்ற கவலையில் சில  விவசாயிகள் பல்வேறு பகுதிகளில் போராட் டங்கள் நடத்தி வருகின்றனர். இத்தகைய நிலையில், அண்மையில் தொடர்ந்து 4 நாட்கள் மழை பெய்ததால் ஏற்க னவே கொள்முதல் செய்யப்பட்ட நெல்  மூட்டைகள் கிராமப்புறங்களில் உள்ள கொள் முதல் நிலையங்களில் அப்படியே அடுக்கி வைக்கப்பட்டு அதை பாதுகாப்பதற்கான போதுமான வசதி செய்து கொடுக்காத காரணத்தினால் கொள்முதல் நிலையங்களி லும் மூட்டைகள் நனைந்து வீணாகி உள்ளன.  

இந்த 4 நாட்களும் நெல் கொள்முதல் செய்யப் படாத காரணத்தால் விவசாயிகள் பெரும் கவ லையில் உள்ளனர். இதனிடையே டெல்டா மாவட்டங்களில் பெரும்பகுதியான இடங்க ளில் கொள்முதல் நிலையங்களை மூடியும்  வருகின்றனர். இது டெல்டா மாவட்டங்களில் தொடர் பிரச்சனையாக மாறி வருகின்றது.  விவசாயிகளிடம் ஈரப்பதம் உள்ளிட்ட கார ணங்களைக்கூறி கொள்முதல் செய்ய தயக்கம் காட்டும் நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாகம் அந்த நெல்லை பாதுகாப்ப தில் போதிய அக்கறை காட்டுவதில்லை என வும் நெல்லை கொள்முதல் செய்யும்போது விவசாயிகளிடம் மூட்டைக்கு ரூ.40 கட்டாய மாக பெறுவதில் காட்டும் முனைப்பை நெல்லை பாதுகாப்பதில் காட்டவில்லை எனவும் விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.  விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் நெல், கொள்முதல் நிலையங்களிலேயே வாரக்கணக்கில் தேங்குகிறது. இதனால் ஏற்படும் எடை இழப்பிற்கு கொள்முதல் நிலைய  ஊழியர்களும், சேமிப்பு கிடங்குகளில் சேத மானால் அங்குள்ள பணியாளர்களும்தான் பொறுப்பேற்க வேண்டியுள்ளது. அதோடு விவசாயிகளிடம் வாங்கும் பணத்தில் லாரி களில் ஏற்றுவதற்கு மட்டும் மூட்டைக்கு ரூ.5 கட்டாயமாக தரவேண்டியுள்ளது. சுமை தூக்கும் பணியாளர்களுக்கு மூட்டைக்கு ரூ.10 வழங்கப்படும் என முதல்வர் அண் மையில் அறிவித்திருந்தார். ஆனால் தெளி வான அரசாணை இல்லாததால் அது அமல்  படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கின்ற னர். கொள்முதல் நிலையங்களில் ஆண்டுக் காண்டு நெல் கொள்முதல் உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால் போதிய சேமிப்பு  கிடங்குகளும் நெல்லை பாதுகாக்கவும், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்க ளுக்கு அனுப்பவும் உரிய ஏற்பாடுகளை செய்வதில் அரசிடம் தொய்வு ஏற்படுகிறது. கொள்முதல் செய்யப்பட்டதில் 25 சதவிகித நெல்லை மாவட்டங்களில் இருப்பு வைத்துக் கொள்ளலாம் என விதி உள்ளது.

ஆனால்  சேமிப்பு கிடங்குகளில் பல லட்சம் மூட்டை களை சேமித்து வைத்து ஏன் வீணாக்கி வரு கின்றனர் என தெரியவில்லை என்று விவசா யிகள் பலரும் புலம்புகின்றனர்.  இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக உயர் அதிகாரிகளிடம் கேட்டால் கடந்த 2 ஆண்டுகளில் அதிகமான நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை வெளி மாவட்டங்களிலுள்ள தனியார் அரவை ஆலைக்கு அனுப்பி வருகிறோம். கடந்த குறுவை பருவத்தில் கொள்முதல் செய்யப் பட்ட நெல் அனைத்தும் சேமிப்பு கிடங்கு களில் இருந்தபோது தொடர்ந்து பெய்த கன மழையால் நெல் மூட்டைகள் நனைந்து  சேதமாகின. எனினும் நெல் மூட்டைகளை பாதுகாக்க தேவையான முன்னேற்பாடு களை செய்து வருகிறோம் என்கின்றனர். நம்முடைய விருப்பம் எல்லாம் திறந்தவெளி கிடங்குகளில் சேதமான நெல் மூட்டைகள் தொடர்பாக தமிழக அரசும், நுகர்பொருள் வாணிபக் கழகமும் உரியவாறு ஆய்வு செய்து  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான்.