தஞ்சாவூர், நவ.10- அடிக்கடி விபத்துகள் ஏற் படும் பூக்கொல்லை காட் டாறு பாலத்தை இடித்து விட்டு, புதிதாக அமைத்து தர வேண்டும். முதல்கட்டமாக இருபக்கமும் தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத் துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியிலிருந்து பூக்கொல்லை செல்லும் வழியில் பூனைகுத்தியாறு என்ற காட்டாறு உள்ளது. சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த காட்டாற் றுப் பாலம், தற்போது உள்ள போக்குவரத்து நெரிசல் சூழ்நிலைக்கு ஏற்றதாக இல்லாமல் குறுகியதாக வும், இருபுறமும் அமைக் கப்பட்ட சிமெண்ட் தடுப்பு வேலிகள் உடைந்து விழுந் தும் காணப்படுகிறது. மேலும், இப்பகுதியில் கன மழை பெய்யும் போது, இப்பாலத்தை தாண்டி தண் ணீர் வழிந்தோடிச் செல்லும் நிலை உள்ளது. அந்த நேரங் களில் போக்குவரத்து துண் டிக்கப்படும் நிலை உள்ளது. இந்நிலையில், இந்தப் பாலம் குறுகியதாக இருப்ப தால் எதிரே வரும் வாகனத் திற்கு வழி விடும்போது, வாகன ஓட்டிகள் அடிக்கடி ஆற்றில் தவறி விழும் அபா யம் உள்ளது. இந்நிலையில், வியாழ னன்று வீரியங்கோட்டை பகு தியில் இருந்து பொருட் களை ஏற்றி வந்த சுமை ஆட்டோ எதிரே வந்த வாக னத்திற்காக வழி விடும் போது கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்தது. ஆற் றில் ஓரளவு தண்ணீர் சென்று கொண்டிருந்ததால் வாகன ஓட்டிக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. இதே போல், கடந்த வாரம் பேருந்துக்கு வழிவிடு வதற்காக மோட்டார் சைக் கிளில் வந்த ஒரு வாலிபர், மனைவி குழந்தையுடன் ஆற்றில் தவறி விழுந்த சம்ப வமும் நடந்துள்ளது. இதுகுறித்து, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன் றியச் செயலாளர் (பொ) வே. ரெங்கசாமி கூறுகையில், ‘‘பழுதடைந்துள்ள நிலை யில் உள்ள இந்தப் பாலத்தை இடித்து விட்டு, புதிதாக கட்டித் தர வேண்டும். பல வருடங்க ளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பாலத்தை, தற்போ தைய போக்குவரத்து சூழ லுக்கு ஏற்ப விரிவுபடுத்தி இருபுறமும் பாதுகாப்பு வேலி அமைத்து தர வேண்டும். எனவே, நெடுஞ்சா லைத்துறை, மாவட்ட நிர்வா கம் அடிக்கடி விபத்து நடப்ப தால் உடனடியாக தடுப்பு வேலி அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண் டும். உரிய நடவடிக்கை எடுக் காத பட்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுமக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும்’’ என்றார்.