districts

கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்

 தஞ்சாவூர், ஜன. 25 - தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு கால்நடை நலம்  மற்றும் விழிப்புணர்வு முகாம், பட்டுக்கோட்டை கோட்டம்  கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பாக ஆலடிக்குமுளை ஊராட்சியில் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் சூர்யா  புகழேந்தி தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் தி.பழனிவேல் முகாமினை தொடங்கி வைத்தார்.  முகாமில் பங்குபெற்ற முன்னோடி கால்நடை வளர்ப் போர் மற்றும் சிறந்த கிடேரிக்கன்றுகள் வளர்ப்போருக்கு பரிசு கள் வழங்கப்பட்டன. இம்முகாமில் செயற்கை முறைக் கரு வூட்டல், சினை பரிசோதனை, மலடுநீக்க சிகிச்சை, குடற்புழு  நீக்கம், ஆண்மை நீக்கம், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, தாது உப்புக் கலவை வழங்குதல், விழிப்புணர்வு விளம்பர குறிப்புகள் வழங்குதல் போன்ற பணிகள் நடை பெற்றன. விழாவில் பங்கேற்ற விவசாயிகளுக்கு ஊராட்சி மன்றம் சார்பில் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.  முகாமில், கால்நடை பராமரிப்பு உதவி இயக்குனரிடம் நறு வழிக்கொல்லை - ஆலடிக்குமுளை  கிராமத்திற்கு பகுதி நேர  கால்நடை மருத்துவமனை அமைக்க கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.