கும்பகோணம், பிப்.1- கும்பகோணம் மாநகராட்சிக் கூட்டம் மேயர் சரவணன் தலை மையில் நடைபெற்றது. துணை மேயர் சுப.தமிழழகன், ஆணையர் செந்தில்முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் 31 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 34-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆ. செல்வம் பேசியதாவது:- கும்பகோணம் தாராசுரம் காவிரி அம்மன் சுடுகாட்டை பரா மரிக்க ஏற்கனவே வலியுறுத்தி னேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இங்கு சடலங் களை எரியூட்டுவதற்கு எந்தக் கட்ட ணமும் நிர்ணயிக்கவில்லை. மாநகராட்சி உரிய கட்டணம் நிர்ண யிக்க வேண்டும். ஈமக்கிரியை மண்டபத்தை சீரமைக்க வேண்டும். வளையப்பேட்டை பாசன வாய்க்கால் கழிவுநீர் வடிகாலாக மாறிவிட்டது. இந்த வாய்க்காலை சீரமைக்கவேண்டும். மக்கள் முன்பு அமிருத் திட்டத்தில் குடிநீர்க் கட்ட ணம் செலுத்தி வந்தனர். தற்போது ஜல்ஜீவன் திட்டத்திலும் பய னீட்டாளர்கள் பெயர் பதிவு செய் யப்பட்டுள்ளது. இரண்டு திட்டங்க ளுக்கும் குடிநீர் கட்டணம் செலுத் தும் நிலை உள்ளது. இதனால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர். ஏதாவதொரு ஒரு திட்த்தில் குடிநீர் கட்டணம் செலுத்துவதை உறு திப்படுத்த வேண்டும் என்றார். மேலும், பைராகி தோப்பில் உள்ள குளத்தில் மழைநீர் தேங்கி தெருக்களில் தண்ணீர் ஓடுகிறது. மழைக்காலத்தில் குளத்திலிருந்து பிரதான சாலையைக் கடந்து மோட் டார் மூலம் தண்ணீர் இறைக்கப் பட்டது. ரூ.2 ஆயிரம் செலவு செய்து குளத்து தண்ணீரை இறைக்க லாம். இதற்குக் கூட மாநகராட்சி யில் பணம் இல்லையா? புதிய பேருந்து நிலையத்திலி ருந்த மூன்று கழிவறைகளில் இரண்டு மூடப்பட்டுள்ளது. இத னால் வெளியூர் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். மூடப்பட்டுள்ள கழிவறைகளைத் திறக்க வேண்டும். மோதிலால் தெரு ஆஞ்ச நேயர் கோவில் முதல் பஸ் ஸ்ண்ட் வரை இருபுறமும் தள்ளு வண்டிகள் மூலம் வியாபாரம் நடக்கிறது. இந்தச் சாலையில் மினி பேருந்துகளும் செல்கிறது. இதனால் மக்கள் நடந்து கூட செல்லமுடியவில்லை. தள்ளு வண்டி கடைகளை முறைப்படுத்த வேண்டும். கொசுத் தொல்லை யைக் கட்டுப்படுத்த வீடுதோறும் கொசு வலைகள் வழங்கவேண்டும் என்றனர்.