districts

img

திருஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஜன.21- திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு நியா யம் கேட்டு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்டா மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.  திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை, கரும்பு பயிரிட்ட விவ சாயிகளுக்கு வழங்க வேண்டிய, ரூ.112  கோடி நிலுவைத் தொகையை உடன டியாக வழங்க வேண்டும். 6,000 விவசாயி கள் பெயரில் மோசடியாக பெற்ற, ரூ.300  கோடி வங்கிக் கடன் பிரச்சனையில் இருந்து விவசாயிகளை விடுவிக்க வேண் டும். தமிழக அரசு விவசாயிகளின் நியாய மான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.
தஞ்சாவூர் 
தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் எம். பழனிஅய்யா, மாவட்ட துணைத்தலை வர் ஞானமாணிக்கம், திருவையாறு ஒன்றிய செயலாளர் எம்.ராம், தஞ்சை  ஒன்றியச் செயலாளர் எஸ்.கோவிந்த ராஜ், அம்மாபேட்டை ஒன்றியத் தலை வர் கருப்பையன், சிபிஎம் திருவையாறு ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா, சிபிஎம் தஞ்சை மாநகர செயலாளர் எம்.வடிவேலன், மாவட்டக் குழு உறுப்பினர் என்.குருசாமி, சிபிஎம் மாநகரக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு தமிழ்நாடு தென்னை விவசாயி கள் சங்கத்தின் தஞ்சை மாவட்டத் தலை வர் எம்.செல்வம் தலைமை வகித்தார்.  பேராவூரணி வட்டாட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாவட்டத் துணைத் தலைவர் ஜாக்குலின்  தலைமை வகித்தார்.  தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.வேலுச் சாமி, விவசாயிகள் சங்க மாவட்டக் குழு  உறுப்பினர் மூத்த தோழர் வீ.கருப்பையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  பின்னர், ரெட்டவயல் கூட்டுறவு கடன்  சங்கத்தில், கரும்புக் கடன் பெற்ற விவ சாயிகளுக்கு வழங்க வேண்டிய தள்ளு படி நிலுவைத் தொகையை பேச்சு வார்த்தையில் ஒப்புக்கொண்டபடி வழங்க  வேண்டும் என வலியுறுத்தி துணை வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது. பூதலூர் வடக்கு ஒன்றியக் குழு  சார்பில் திருக்காட்டுப்பள்ளி காந்தி  சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, விவசாயிகள் சங்க ஒன்றியச் செய லாளர் ஆர்.உதயகுமார் தலைமை வகித் தார்.
கும்பகோணம் 
கும்பகோணம் காந்தி பூங்கா அருகில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட  துணைத் தலைவர் கணேசன், திருப்ப னந்தாள் ஒன்றியத் தலைவர் கலைமணி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன், கரும்பு விவசாயிகள் சங்க  மாநிலச் செயலாளர் தங்க.காசிநாதன், சிபிஎம் மாநகரச் செயலாளர் செந்தில் குமார், ஒன்றியச் செயலாளர் பி.ஜேசு தாஸ் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
திருச்சிராப்பள்ளி
தமிழ்நாடு விவசாயிகள் சங்க தொட்டி யம் வட்டக்குழு சார்பில் திருச்சி மாவட்டம்  தொட்டியம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டப் பொருளாளர் ராமநாதன் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர்.
மன்னார்குடி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பெரியார் சிலை எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் ஜி. முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தார். நகரத் தலைவர் எஸ்.ஏகாம்பரம் முன்னிலை வகித்தார். மாவட்டச் செய லாளர் எம்.சேகர், மாவட்டத் தலைவர் எஸ். தம்புசாமி, மாவட்டப் பொருளாளர் வி.எஸ்.கலியபெருமாள், விவசாய தொழி லாளர் சங்க தலைவர் கே.டி.கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை 
மயிலாடுதுறை கோட்டாச்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்டத் தலைவர் டி.சிம்சன்  தலைமை வகித்தார். மாவட்டச் செயலா ளர் எஸ்.துரைராஜ், தொழிற்சங்க மையம் ப.மாரியப்பன், மாற்றுத்திறனாளி சங்க மாவட்டத் தலைவர் து.கணேசன் உள்ளிட் டோர் கலந்துக்கொண்டனர்.