தஞ்சாவூர், மார்ச் 14- தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவல கத்தில், கட்சி நிதி, கட்சி உறுப்பினர் லெவி சந்தா தீக் கதிர் சந்தா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் எஸ்.கோவிந்தராஜ் கட்சி நிதியையும், வி.தொ.ச ஒன்றி யச் செயலாளர் கு.பாஸ்கர் கட்சி உறுப்பினர் லெவி சந்தாவையும், வி.தொ.ச ஒன்றியத் தலைவர் கோ. ஜெய்சங்கர் தீக்கதிர் சந்தா வையும், மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகியிடம் வழங்கினர். இதில், மாவட் டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என். சுரேஷ்குமார் மற்றும் ஒன்றி யக்குழு, நகரக்குழு-கிளைத் தோழர்கள் கலந்து கொண்ட னர்.