தஞ்சாவூர், ஜூன் 16- தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில், நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட விசைப் படகுகள் உள்ளன. இந்நிலையில், 61 நாட்கள் மீன்பிடித் தடைக் காலம் முடிவடைந்த நிலையில், புதனன்று மல்லிப் பட்டினம், சேதுபாவாசத்திரம், கள்ளிவயல் தோட்டம் மீன்பிடி இறங்கு தளத்திலிருந்து, இந்த விசைப்படகுகள், தடைக்காலம் முடிந்த முதல் நாளாக மீன்பிடிக்க கடலுக்கு சென்றன. இந்நிலையில், வியாழனன்று விசைப்படகுகள் கரைக்கு திரும்பின. இதில் போதிய அளவு மீன்கள் பிடிபடாததால் மீனவர்கள் கவலைக்கு உள்ளாகியுள்ளனர். பெரும்பாலும் கோழித் தீவ னத்திற்கு உரமாகும் பொடி மீன்கள் மட்டுமே கிடைத்தன. ஒரு சில மீனவர்களின் வலையில் ஏற்றுமதி தரம் வாய்ந்த இறால்கள் பிடிபட்டன. ஆனால் 600 ரூபாய் வரை விலை போன இறால் தற்போது கிலோ 300 ரூபாய்க்கு மட்டுமே வியாபாரிகளிடம் விலை போனது. இதேபோல் ஓரளவு பிடிபட்ட நண்டு, கணவாய் நல்ல விலைக்கு சென்றது. இதனை மீன் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். அதே நேரத்தில் மீன்வளத்துறை அதிகாரி கள், கடலோர பாதுகாப்பு குழுமம், கடல் அம லாக்கப் பிரிவு அதிகாரிகள் மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துகின்றனரா என படகுகளில் ஏறி ஆய்வு செய்தனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியிலிருந்து மீன்பிடி தடைக்காலம் முடிந்து நாட்டுப்படகு மீனவர்களும், விசைப்படகு மீன வர்களும் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். வியாழனன்று கரை திரும்பிய மீனவர்கள் குறைந்த அளவிலான மீன்களே பிடிபட்டதாக கூறினர். இதேபோன்று கட்டுமாவடி மீன் மார்க்கெட்டி ற்கு வெளியூர்களில் இருந்து வரக்கூடிய மீன்களின் வரத்தும் குறைந்தது. இதனால் மீன்களை ஏலம் எடுக்க வந்திருந்த வியாபாரிகளும், மீன் வாங்க வந்த பொதுமக்களும் ஏமாற்றம் அடைந்தனர்.