districts

பள்ளிகள் திறந்ததும் முதல் 5 நாள் நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

தஞ்சாவூர், ஜூன் 6 -  ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறந்ததும், முதல் 5 நாட்கள் மாணவர்களுக்கு நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். தஞ்சாவூரில் திங்களன்று தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்க 21 ஆவது  ஆண்டு பொதுக்குழு மற்றும் மாநில மாநாடு  நடந்தது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தி யாளர்களிடம் கூறியதாவது:  “தமிழகத்தில் ஜூன் 13 ஆம் தேதி பள்ளி கள் திறக்கப்பட உள்ளன. மாணவ, மாணவி கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும். முதல்  5 நாட்கள் நல்லொழுக்கத்தை போதிக்கும் வகுப்புகள் நடத்தப்படும். இதில், தன்னார்வ லர்கள், காவல்துறையினர் என பலரும் மாண வர்களுக்கு நல்லொழுக்கங்கள் குறித்து பாடம் எடுப்பர். அதன் பிறகு வழக்கம் போல  வகுப்புகள் நடைபெறும். 10 மற்றும் 12 ஆம்  வகுப்பு பொது தேர்வு எழுதாத மாணவர்க ளுக்கு 2022 ஜூலை அல்லது செப்டம்பர் மாதம்  தேர்வு நடத்தப்படும். மாணவர்கள் பயம் இல்லாமல், தேர்வை எழுத முன் வர வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.