districts

img

தஞ்சாவூரில் ஒரே நாளில் 1,055 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா

தஞ்சாவூர், மார்ச் 17- தஞ்சாவூரில் வருவாய்  மற்றும் பேரிடர் மேலாண் மைத் துறை சார்பில் ஒரே  நாளில் 1,055 பேருக்கு விலை யில்லா வீட்டுமனை பட்டா வுக்கான ஆணைகள் புதன் கிழமை வழங்கப்பட்டன. இவ்விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பங்கேற்று, தஞ்சாவூர்  வட்டத்தைச் சேர்ந்த 150 பேருக்  கும், திருவையாறு வட்டத் தைச் சேர்ந்த 59 பேருக்கும், ஒரத்தநாடு வட்டத்தைச் சேர்ந்த 70 பேருக்கும், பூத லூர் வட்டத்தைச் சேர்ந்த 93  பேருக்கும், பட்டுக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த 200 பேருக்கும், பேராவூரணி வட்  டத்தைச் சேர்ந்த 247 பேருக்  கும், பாபநாசம் வட்டத்தைச் சேர்ந்த 95 பேருக்கும், கும்ப கோணம் வட்டத்தைச் சேர்ந்த 63 பேருக்கும், திரு விடைமருதூர் வட்டத்தைச் சேர்ந்த 78 பேருக்கும் என  மொத்தம் 1,055 பேருக்கு ரூ.  4.12 கோடி மதிப்பிலான விலையில்லா வீட்டு மனை  பட்டாவுக்கான ஆணை களை வழங்கினார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்  ராஜ் ஆலிவர், கூடுதல் ஆட்சி யர் (வருவாய்) என்.ஓ.சுக புத்ரா சட்டமன்ற உறுப்பி னர்கள் துரை. சந்திசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூர்), மேயர் சண்.ராமநாதன், மாந கராட்சி ஆணையர் க. சர வணகுமார், மாவட்ட ஊரா ட்சிக்குழுத் தலைவர் ஆர். உஷா புண்ணியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.