தஞ்சாவூர், மே 12- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிமன்ற வளாகத்தில், பேராவூரணி வழக்கறிஞர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் மூத்த வழக்கறிஞர் எஸ்.மோகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், பேராவூரணி வழக்கறிஞர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். எஸ்.மோகன் தலைவராகவும், எம்.செல்வராசு துணைத் தலைவராகவும், குழ.செ. அருள்நம்பி செயலாளராகவும், சிவேதி ஏ.ஆர்.நடராஜன் இணைச் செயலாளராகவும், ஏ.சுசித்ரா பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.