தஞ்சாவூர், ஜூலை 7- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா நடைபெற்றது. விழாவில் தலைவராக பொறியாளர் எம்.திருப்பதி, செய லாளராக ஆசிரியர் எஸ்.செந்தில்குமார், பொருளாளராக மருத்துவர் கே.பிரகாஷ் பணியேற்றுக் கொண்டனர். சிறப்பு விருந்தினராக ரோட்டரி பவுண்டேசன் மாவட்ட சேர்மன் வி.இராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை பணியில் அமர்த்தி வாழ்த்திப் பேசினார். துணை ஆளுநர் ஏ.தாமஸ் ஆரோக்கிய ராஜ் புதிய உறுப்பி னர்களை சங்கத்தில் இணைத்து வைத்துப் பேசினார். நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை, நலிவடைந்த குடும்பங்களுக்கு மளிகைப் பொருட் கள், பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி, நாற்காலி கள், மரக்கன்றுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.