districts

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர், ஜூலை 31-  தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வா தார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை  அலகில், 8 ஊராட்சி ஒன்றியங்களில், (ஒரத்தநாடு-2, திரு விடைமருதூர்-1, கும்பகோணம்-1, திருவையாறு-1 அம்மா பேட்டை -3, பூதலூர்-1, மதுக்கூர்-1, பேராவூரணி-1) காலியாக  உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர்கள்(பி.சி) பணியிடங் களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் (பி.சி) தகுதிகள் விபரம்:  கல்வித்தகுதி - பட்டப் படிப்பு (ஏதாவது ஒரு பாடத்தில்) மற்றும் குறைந்தபட்சம் 6 மாத கால (எம்.எஸ்-ஆபிஸ்) கணினி பயிற்சி பெற்றிருக்க வேண்டும். 28 வயதிற்குள் இருக்க  வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் மகளிர் மேம்பாட்டு  திட்டம் தொடர்பான பதவிகளில் பணியாற்றி இருக்க வேண்டும். தொடர்புடைய வட்டாரத்தை இருப்பிடமாக கொண்டிருக்க வேண்டும். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 8.8.2022.  விண்ணப்பத்தை இணை இயக்குநர் / திட்ட இயக்குநர்,  தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, எண்.223 -  இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம்,  தஞ்சாவூர் - 613 010 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.  இக்காலிப்பணியிடங்களுக்கு மாவட்ட தேர்வுக்குழு வாயிலாக, எழுத்து தேர்வு 75 மதிப்பெண்களுக்கும், நேர்முக  தேர்வு 25 மதிப்பெண்களுக்கும் நடத்தப்படும். எழுத்து தேர்வில் 45 மதிப்பெண்கள் (75 மதிப்பெண்களுக்கு 60  விழுக்காடு) பெற்ற விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்விற்கு  அழைக்கப்படுவர்.  குறைந்தபட்சம் 60 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்ற  விண்ணப்பதாரர்கள் தகுதி பட்டியலில் இடம்பெறுவர்.  தகுதியான விண்ணப்பதாரர்கள், அரசு இடஒதுக்கீடு விதி முறைகளை பின்பற்றி இறுதி தேர்வு செய்யப்படுவர். உரிய  காலத்திற்குள் வரப் பெறாத விண்ணப்பங்கள் ஏற்கப்பட  மாட்டாது என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.