பேராவூரணி, ஜன.5- தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்தி ரம் வட்டார விவசாயிகள் புகையான் பூச்சி தாக்குதலில் இருந்து சம்பா, தாளடி நெற் பயிரை காப்பாற்றுவது குறித்து வேளாண்மை துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து வேளாண் துறை உதவி இயக்குநர் (பொ) சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தற்போது இரவில் வெப்பநிலை குறைவாகவும், பகலில் மந்த மான சூரிய வெளிச்சமும் இருப்பதால், நெற் பயிரை புகையான் பூச்சிகள் தாக்க வாய்ப்புள்ளது. பூச்சிகள் வேர்களின் அடிப் பாகத்தில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால் பயிர் மஞ்சள் நிறமாக மாறும். பின்னர் பழுப்பு நிறமாக மாறும். பாதிக்கப்பட்ட வயல்களில், ஆங் காங்கே வட்ட வட்டமாக புகைந்தது போல் காணப்படும். நடவு வயலில் 8 அடிக்கு ஒரு இடைவெளி விட்டு பாத்தி நடவு செய்தல் வேண்டும். மண் பரிசோதனை பரிந்து ரைப்படி தழைச்சத்து இடும் போது 3-லிருந்து 4 முறையாக பிரித்து இட வேண் டும். களை செடிகளை அகற்றி விட வேண்டும். புகையான் பூச்சி தாக்குதலுக்கு எதிர்ப்புத்திறன், தாங்கும் திறன் கொண்ட ரகங்களை தேர்வு செய்து பயிரிடலாம். விளக்குப்பொறி அமைத்து தாய்ப்பூச்சி களின் நடமாட்டத்தை கண்காணித்து அழிக்கலாம். மஞ்சள் நிற ஒட்டுப்பொறிகளை ஹெக் டேருக்கு 12 என்ற அளவில் அமைக்கலாம். வயலில் புகையானின் இயற்கை விரோதி களான சிலந்தி, பச்சை மிரிட் நாவாய்ப் பூச்சி, புள்ளி வண்டு, தட்டான், ஊசித்தட் டான் போன்ற இரை விழுங்கிகள் இப்பூச்சி யை பெரும் அளவில் கட்டுப்படுத்துகின்றன. மேலும் புகையானின் மறு உற்பத்தியை பெருக்கும் மீதைல்பாரத்தியான் மற்றும் செயற்கை பைரித்ராய்டு மருந்துகளை கண் டிப்பாக தவிர்க்க வேண்டும்’’ என தெரிவிக் கப்பட்டுள்ளது.