districts

தஞ்சையில் நாளை பொங்கல் கலை நிகழ்ச்சிகள் தொல்லியல் துறை நடத்துகிறது

தஞ்சாவூர், ஜன.14-  பொங்கல் விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் மரபுசார் கலை நிகழ்ச்சிகள் ஜனவரி 16, 17 தேதிகளில் தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள தர்பார் கூடத்தில் நடைபெற உள்ளது. ஜனவரி 16 அன்று காலை 10 மணி  முதல் 12 மணி வரை பட்டுக்கோட்டை பி.எம்.இளையராஜா குழுவினரின் நாகசுரம், கரகம், காவடி உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடை பெறுகின்றன. இதைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை  ஸ்டார் கலைக்குழு சார்பில் தப்பாட்டம்,  ஒயிலாட்டம், மயிலாட்டம், காவடி யாட்டம், கரகம் ஆகிய கலை நிகழ்ச்சி களும் நடைபெறுகின்றன. ஜனவரி 17 அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை, திருவாரூர் அருள்  கலைக்குழு சார்பில் நாதம், தப்பாட்டம்,  கரகம், களியாட்டம், கருப்புசாமி ஆட்டம் ஆகியவையும், மாலை 3 மணி  முதல் 5 மணி வரை மல்லிகா பிரகாஷ் கலைக்குழுவின் சார்பில் மேளம், நாதம், கரகாட்டம், நாட்டுப்புற பல்சுவை  நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.