தஞ்சாவூர், டிச.5 - ஓய்வு பெற்ற பத்திரிகையா ளர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூ தியம் வழங்க உத்தரவிட்ட முதலமைச்ச ருக்கு தஞ்சாவூர் பத்திரிகையாளர்கள் நன்றி தெரிவித்தனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டா லின், அக்டோபர் 31-ஆம் தேதி செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், பத்திரிகைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகளை வழங்கினார். பத்திரிகையாளர்களின் பணியினை சிறப்பிக்கும் வகையில், தமிழ்நாட்டில் முதன்முறையாக உழைக்கும் பத்திரி கையாளர்களை முன்களப் பணியா ளர்களாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும், 2021-22-ஆம் ஆண்டுக்கான செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கையில், உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப் பட்டு வரும் அனைத்து திட்டங்களை யும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவ தோடு, நலவாரிய உதவித் தொகைகள், நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் பத்திரிகையாளர் நல வாரி யம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு, இதன்படி பத்திரிகையா ளர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சை மாவட்ட ஆட்சி யர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரி வித்ததாவது, ‘‘தமிழக அரசு, பணிக் காலத்தில் இயற்கை எய்தும் பத்திரி கையாளர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் குடும்ப நிதி உதவியை, ரூ.3 லட்சத்திலிருந்து 5 லட்ச மாக உயர்த்தி வழங்கி உள்ளார்.
பத்திரிகையாளர் நல நிதியத்திற் கென, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவ னத்தில், ஒரு கோடி ரூபாய் நிரந்தர நிதியாக வைப்பீடு செய்யப்பட்டு, இத்தொகையின் மூலம் கிடைக்கப் படும் வட்டித் தொகையிலிருந்து பத்திரி கையாளர்களுக்கு நிதி உதவி, கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவ டிக்கையின் போது பணியாற்றிய பத்திரி கையாளர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.5 ஆயிரம் வீதம் 5,782 பத்திரிகையாளர்களுக்கு மொத்தம் ரூ.2 கோடியே 89 லட்சத்து 10 ஆயிரம் சிறப்பு ஊக்கத் தொகையாக வழங்கப் பட்டது.
கொரோனா நோய்த் தொற்றால் இயற்கை எய்திய பத்திரிகையா ளர்களின் குடும்பத்திற்கு முதல மைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப் பட்டுவரும் இழப்பீட்டுத் தொகையை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி, 20 பத்திரிகையாளர்களின் வாரிசுதாரர்களுக்கு மொத்தம் ரூ.2 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப் பட்டுள்ளது. பத்திரிகைத் துறையில் பணிபுரியும் செய்தியாளர்களுக்கு அரசு விருப் புரிமை ஒதுக்கீட்டில், சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் உள்ள தமிழ் நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு களில் குறைந்த வாடகையில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பத்திரி கையாளர் நல நிதியத்தில் இருந்து வழங்கப்படும் மருத்துவ உதவித்தொ கையை ரூ.2 லட்சத்திலிருந்து, ரூ.2 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தி வழங்கி யது. பத்திரிகையாளர் அங்கீகார அட்டை பெற்றுள்ள அனைத்து பத்திரிகை யாளர்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் என பல்வேறு திட்டங்கள் பத்திரிகையாளர் நல வாழ்விற்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்துத் தரப்பு செய்திகளை யும் பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையில், 24 மணி நேரமும் அயராது பணியாற்றி வரும் பத்திரிகை யாளர்கள், ஓய்வு பெற்ற பின்னர் அவர்க ளுக்கு அரசு சார்பில் மாதம் ரூ.10 ஆயி ரம் ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகளை முதலமைச்சர் வழங்கி னார். அந்த வகையில், தஞ்சை மாவட் டத்தை சேர்ந்த ஆர்.தமிழ்ச்செல்வம், லெ.ராஜ் என்ற ரங்கராஜ் ஆகிய 2 ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூ தியத்திற்கான ஆணை வழங்கப்பட்டு உள்ளது. ஓய்வூதியம் பெறத் தேர்வாகியுள்ள இரு பத்திரிகையா ளர்களும் தமிழக அரசுக்கு நன்றி தெரி வித்தனர்.