பட்டுக்கோட்டை, டிச.29- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தை தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தினர் முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தி னர். இதையடுத்து கோட் டாட்சியரின் நேர்முக உதவி யாளர் அருள்ராஜ் மற்றும் காவல்துறையினர் சமா தானம் செய்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட் டது. பேராவூரணி அடுத்த ரெட்டவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கரும்பு விவ சாயிகள் பெற்ற கடன் தள்ளு படி தொகையை வழங்க வேண்டும். மோசடி செய்த கூட்டுறவு சங்க செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல கட்டப் போராட்டங்கள் நடத்தப் பட்டு வருகிறது. இந்நிலையில், வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தில், கடந்த 19-ஆம் தேதி கோட்டாட்சியர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தை யில் முடிவு எட்டப்படாத நிலையில், டிச.29-ஆம் தேதி வியாழனன்று காலை 10 மணிக்கு மறு சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தப் படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண் ணன், விதொச மாவட்டச் செயலாளர் ஆர்.வாசு, விவ சாயிகள் சங்க நிர்வாகிகள் சேதுபாவாசத்திரம் வீ.கருப் பையா, ஆர்.எஸ்.வேலுச் சாமி, வி.ஆர்.கே.செந்தில் குமார், பட்டுக்கோட்டை பாலு, மகாலிங்கம், மதுக்கூர் ஏ.எம்.வேதாச்சலம் உள் ளிட்ட நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்திற்கு வந்திருந்தனர். அப்போது பட்டுக் கோட்டை வருவாய் கோட் டாட்சியர் விடுமுறையில் இருப்பதாகவும், ஜனவரி 4-ஆம் தேதி பேச்சு வார்த்தை தள்ளி வைக்கப் பட்டுள்ளதாகவும் அதிகாரி கள் தரப்பில் தெரிவித்துள்ள னர். இதுகுறித்து முறை யாக தங்களுக்கு முன்கூட் டியே தகவல் தெரிவிக்கப் படவில்லை எனக்கூறி, தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தி னர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி னர். இதையடுத்து, வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் அருள்ராஜ், பட்டுக்கோட்டை காவல் துறையினர் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தினரை சமா தானம் செய்தனர். அப்போது தகவல் தொடர்பு பரிமாற் றத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்காததற்கு வருவாய்த் துறையினர் தரப்பில் வருத்தம் தெரி விக்கப்பட்டது. இதை ஏற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்ற னர்.