districts

img

நீலகண்ட பிள்ளையார் கோவில் புதிய செயல் அலுவலர் பொறுப்பேற்பு

தஞ்சாவூர், மே 20 -  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நீலகண்டப் பிள்ளை யார் திருக்கோவில் செயல் அலுவலராக ரவிச்சந்திரன் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன், பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் செயல் அலுவலராக பணியாற்றி வந்தார்.  புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட செயல் அலுவல ரிடம், ஏற்கனவே செயல் அலுவலராக பணியாற்றிய சிதம்பரம்  பொறுப்புகளை ஒப்படைத்தார். புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட செயல் அலுவல ருக்கு பரம்பரை அறங்காவலர் தலைவர் கணேசன் சங்கரன்,  அறங்காவலர் குப்பமுத்து சங்கரன், முடப்புளிக்காடு கிராமத்தினர், சங்கரன் வகையறாக்கள், கோவில் பணியா ளர்கள் மற்றும் நடராஜன் சங்கரன், பெருமாள் கோவில்  அர்ச்சகர் ரகு தீட்சிதர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.