districts

img

ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிக்கும் செயல் விளக்கம்

பட்டுக்கோட்டை, டிச.12-  நானோ யூரியா ட்ரோன் மூலம் தெளிக்  கும் செயல் விளக்கம் மதுக்கூர் வட்டாரம் நெம்மேலி கிராமத்தில் நடைபெற்றது. ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிக்க நெம்மேலி கிராமத்தை சேர்ந்த 30 விவசாயி களை ஒருங்கிணைத்து ஒரே நேரத்தில் 30 ஏக்கர் வயலில் தெளிக்கப்பட்டது. நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் யூரியா மேலுரம் இடுவதால் ஏற்படும் செலவை குறைக்கும் வகையிலும், 46 சத வீத யூரியா திட உரத்தினை பயன்படுத்தும் போது அரசுக்கு ஏற்படும் மானிய இழப்பை தவிர்க்கும் வகையிலும், உற்பத்திச் செலவை குறைத்து உழவர்களின் லாப சதவீதம் உயரும் வகையிலும் தற்போது விவசாயிகளுக்கு நானோ யூரியா வழங்கப்  பட்டு வருகிறது.  நானோ யூரியா விலை ரூ.230. இதனை  20 லிட்டர் நீரில் கலந்து ஒரு மாவுக்கு ஏழு  டேங்க் என ஏக்கருக்கு 21 டேங்க் வரை  தெளிக்கலாம். நானோ யூரியா, திட யூரியா போல வீணாக கரைவதும் இல்லை, ஆவி யாவதும் இல்லை. நிலத்தடி நீருடன் கலந்து வீணாவதுமில்லை.  நெம்மேலி கிராமத்தில் விவசாயிகள் ஒருங்கிணைந்து இரண்டு ட்ரோன்களின் உதவியுடன் ஒரே நேரத்தில் 30 ஏக்கரில் நானோ யூரியா தெளிப்பு பணி மேற்கொண்  டனர்.  இதில், நெம்மேலி ஊராட்சி மன்றத் தலைவர் ரஞ்சனி ராஜராஜன், மதுக்கூர் வேளாண் உதவி இயக்குநர் திலகவதி, துணை வேளாண்மை அலுவலர் அன்பு மணி, கீழக்குறிச்சி வேளாண் உதவி அலு வலர் முருகேஷ் ஆகியோர் விவசாயி களை ஒருங்கிணைத்து விளக்கம் அளித்த னர்.