districts

காவலர்கள் பற்றாக்குறை பேராவூரணி காவல் நிலையத்தில் தேங்கிக் கிடக்கும் பணிகள்

தஞ்சாவூர், ஜூன் 21-  போதிய அளவு காவலர்கள் இல்லாத நிலையில், பேராவூரணி காவல் நிலையத்தில், பணிகள் தேக்க மடைந்து பொதுமக்கள் தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது.  மேலும், பணியில் உள்ள காவலர்கள் மனச்சோர்வுக்கு ஆளாகும் நிலையும் உள்ளது. மாவட்டக் காவல் நிர்வாகம்  விரைந்து, போதிய அளவு காவலர்களை நியமிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத் துள்ளனர்.  தஞ்சாவூர், பேராவூரணியில் உள்ள பழைய காவல்  நிலையம் 1936 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் துவங்கப்பட்டது. தற்போது, கடந்த 2018  ஆம் ஆண்டு முதல் புதிய கட்டிடத்தில் இயங்கி வருகிறது.  பேராவூரணி காவல் நிலையம் தொடங்கப்பட்ட காலத்தில், 21 காவலர்கள் பணியில் இருந்துள்ளனர். தற்போது 86 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், பல  மடங்கு மக்கள் தொகை அதிகரித்துள்ளது. அதேபோல்  குற்றச் செயல்களும் பெருகியுள்ளன. ஆனால், கூடுதல் காவலர்கள் நியமிக்கப்படவில்லை. மாறாக, ஏற்கனவே  இருந்த காவலர்கள்கூட, இல்லாத நிலையில் தற்போது  6 பேர் மட்டும் பணியில் உள்ளதாக தெரிகிறது. அதில்,  ஒரு காவல் ஆய்வாளர், இரண்டு உதவி ஆய்வாளர்கள் மற்றும் மூன்று காவலர்கள் என மொத்தம் 6 பேர் மட்டுமே  பணியில் உள்ளனர்.  விடுப்பு, நீதிமன்றப் பணிகளுக்கு செல்லும் நிலை,  பாஸ்போர்ட் விசாரணை, குற்றச் செயல்கள் விசாரணை  என செல்வதற்கு காவலர்கள் தடுமாறும் நிலை உள்ளது.  மேலும், அரசு உயர் அலுவலர்கள், அமைச்சர்கள் வருகைக்கு பாதுகாப்பு மற்றும் அரசியல் கட்சி பொதுக் கூட்டங்களுக்கு பாதுகாப்புக்கு செல்வது போன்ற நிலை யில் காவலர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.  

பேராவூரணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 92 கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொது மக்கள், நாள்தோறும் பல்வேறு பிரச்சனைகளுக்காக காவல் நிலையம் வந்து செல்கின்றனர். ஆனால் ஒவ்வொரு நாளும் ‘காவலர்கள் இல்லை’ எனக்கூறி திருப்பி  அனுப்புவதால், பொதுமக்களுக்கும் காவல்துறையின ருக்கும் தேவையற்ற மன வருத்தம் ஏற்படுகிறது.  இதனால் பொதுமக்கள் பிரச்சனைகள் தீராத நிலை  உள்ளது. கிராமங்களில் ஏற்படும் சிறு பிரச்சனைகள் குறித்து உரிய நேரத்தில் விசாரித்து நடவடிக்கை எடுக்காமல் போனால் அது மிகப்பெரிய கலவரமாக ஏற்படும் சூழல் உள்ளது. பேராவூரணி கடைவீதியில் திருட்டு, கிராம பகுதிகளில் திருட்டு, மது விற்பனை, போதைப் பொருட்கள் விற்பனை ஆகியவற்றை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையும் ஏற்படுகிறது.  எனவே, பேராவூரணி பகுதி பொதுமக்கள் பிரச்ச னைகளை தீர்க்கும் வகையில் கூடுதல் காவலர்களை பணியில் நியமிக்கவும், போக்குவரத்து காவல் பிரிவு ஏற்ப டுத்தவும், தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேரா வூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.