தஞ்சாவூர், மே 30- தஞ்சாவூர் காமராஜர் சந்தையில் புதிதாக கட்டப்பட்ட கடைகளை வழங்குவதில் பழைய கடைதாரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என மாமன்றக் கூட்டத்தில் மேயர் சண்.ராம நாதன் தெரிவித்தார். தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில், மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் தலைமை யிலும், ஆணையர் க.சரவணகுமார், துணை மேயர் அஞ்சுகம் பூபதி முன்னிலையிலும் திங்கள்கிழமை நடைபெற்றது. காமராஜர் சந்தை கடைகள் ஏலம் தொடர் பான தீர்மானம் எண்.64-ஐ ஒத்தி வைக்க வேண்டும். இச்சந்தையில் பழைய கடைதாரர் களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். வாட கையும் கருணை அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு, மேயர் பதிலளிக்கையில், இத்தீர்மானம் ஒத்தி வைக்கப்படமாட்டாது. அதற்கு பதிலாக ஆணையரிடம் கலந்து பேசி பழைய கடை தாரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். வாடகை நிர்ணயிப்பது குறித்தும் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றார். பழைய பேருந்து நிலையம், சரபோஜி சந்தையில் நாள் முழுவதும் வியாபாரம் செய் யப்படும். ஆனால், காமராஜர் சந்தையில் அரைநாள்தான் வியாபாரம் நடைபெறும். இந்தச் சந்தையில் நலிவடைந்த வியாபாரி களே வியாபாரம் செய்வதால், அவர்களுக்கு கருணை அடிப்படையில் வாடகை நிர்ணயம் செய்து கடைகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு, ஏற்கெனவே, பழைய பேருந்து நிலையம், சரபோஜி சந்தையி லுள்ள கடைகள் வழங்கப்பட்டதை போலவே மாநகராட்சி நிர்வாகத்துக்கு வருவாய் வரும் வகையில் காமராஜர் சந்தை கடைகளும் வழங்கப்படும். மாநகராட்சி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு மாதம் ரூ. 4 கோடி தேவைப் படுகிறது. இவர்களைத் தவிர தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கும் ஊதியம் வழங்க வேண்டும். இதையெல்லாம் கருத்தில் கொண்டும், காமராஜர் சந்தை கடைகளும் ஏலம் விடப்படுகின்றன. என்றாலும், பழைய கடைதாரர்களுக்கும் கடைகள் வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கிறேன். ஆனால், தீர்மானத்தை ஒத்திவைக்க முடியாது என்றார்.