கும்பகோணம், ஜூன் 21 - கோடை விடுமுறை நிறைவு பெற்று சமீபத்தில்தான் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் பள்ளிக் கூடங்களுக்கு மாண வர்களை அழைத்துச் செல்லும் ஆட்டோக் களில் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக மாணவர்கள் அழைத்து செல்லப்படு வதாக புகார்கள் தொடர்ந்து வந்தன. இதையடுத்து திங்கள்கிழமை மாலை கும்பகோணம் மேம்பாலம் அருகே போக்கு வரத்து ஆய்வாளர் சரவணகுமார் தலைமை யிலான, போக்குவரத்து காவல்துறையினர் அதிக எண்ணிக்கையில் மாணவர்களை அழைத்துச் சென்ற ஆட்டோக்களை தடுத்து நிறுத்தியதுடன் அந்தந்த வாகனங்களில் சென்ற குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக் கைக்கு மேல் மாணவர்களை அழைத்துச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினர். மீண்டும் இதேபோல் அதிக எண்ணிக்கை யில் குழந்தைகளை அழைத்துச் சென்றால் அபராதம் விதிக்கப்படும் என ஆட்டோ ஓட்டுநர் களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து காவல் துறையினர் ஆட்டோக்களை அனுப்பி வைத்தனர்.