districts

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்துக்கான பொதுமக்கள் பங்களிப்புத் தொகையை தமிழக அரசே செலுத்த வலியுறுத்தல்

தஞ்சாவூர், ஜூலை 17 -  ஜல் ஜீவன் மிஷன் திட்டத்துக்கான பொதுமக்கள் பங்களிப்புத் தொகை 10  சதவீதத்தை தமிழக அரசே செலுத்த வேண்டும் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தி னர் வலியுறுத்தியுள்ளனர். தஞ்சாவூரில் சனிக்கிழமை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலு வலர்கள் சங்கத்தின் 7 ஆவது மாவட்ட  மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்கு மாவட்டத் தலைவர் ஆர்.ராஜன் தலைமை வகித்தார். மாநில செயற் குழு உறுப்பினர் எஸ்.மகேஷ் வர வேற்றார். மாவட்டச் செயலாளர் கை. கோவிந்தராஜன், மாவட்டப் பொரு ளாளர் ந.தேசிங்குராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநிலத் தலைவர் எஸ்.ரமேஷ். மாநில துணைத் தலைவர் எம். பழனியப்பன், தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ரெங்க சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்ட ஆவணங்களை சமர்ப்பித்து அனுமதி ஆணையினை பெற்ற பிறகு, குடும்ப சூழ்நிலை மற்றும்  இதர காரணங்களால் வீடு கட்ட  விருப்பம் இல்லாத, வீடு கட்ட மறுப்பு தெரிவிக்கும் பயனாளிகளுக்கு வழங்கப் பட்டுள்ள அனுமதி ஆணைகளை ரத்து  செய்து, அவர்களுக்கு விடுவிக்கப் பட்டுள்ள தவணை நிதியினை திரும்ப பெற உரிய நடவடிக்கைகளை மாவட்ட  ஆட்சியர் எடுக்க வேண்டும்.  ஆனால் அதை விட்டுவிட்டு, கட்டு மான பணிகள் துவங்கப்படாத வீடு களுக்கு, ஊராட்சி ஒன்றிய அலுவலர் களை பொறுப்பாக்கி, வீடுகளின் கட்டு மானப் பணிகளை துவங்கிட நெருக்கடி கள் கொடுப்பதை மாவட்ட நிர்வாகம்  கைவிட வேண்டும்.

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களின் பணிகளை பாதிக்கும் விதமாகவும், அலுவலர் களுக்கு மன உளைச்சல்கள் ஏற்படும்  வகையிலும் மாவட்ட ஆட்சியரகத் துக்கு வரவழைத்து நடத்தப்படும் வாராந்திர ஆய்வு கூட்டங்களையும், தினசரி இணைய வழி கூட்டம், ஓயர் லெஸ் வழி கூட்டங்களை தவிர்த்து, 15  நாட்களுக்கு ஒருமுறை மட்டும் மாவட்ட  நிலை அலுவலகங்களின் அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து ஆய்வு  கூட்டம் நடத்த வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள  589 ஊராட்சிகளில் 192 ஊராட்சி களில் மட்டும் 2020-2021 ஆம் ஆண்டில்  ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் குடி நீர் திட்டப் பணிகள் செயல்படுத்தப் பட்டுள்ளன. ஜல் ஜீவன் மிஷன் திட்டம்  செயல்படுத்தப்பட்டுள்ள 192 ஊராட்சி களில் மட்டும் திட்ட மதிப்பீட்டில் 10 சத வீத பொதுமக்கள் பங்கு தொகை வசூல்  செய்யப்பட வேண்டும். இந்நிலை பொதுமக்களிடம் மிகப்பெரிய எதிர்ப் பினை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொகையை தமிழக அரசே செலுத்த வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் பணிபுரி யும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்க ளில் சிலர் நீண்ட காலமாக தாங்கள் குடி யிருக்கும் இடத்திலிருந்து தொலை தூர  வட்டாரங்களில் பணிபுரிந்து வருகின்ற னர். அவர்களின் பணியிட மாறுதல் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலனை  செய்து நியாயமான பணியிட மாறுதல் களை மாவட்ட ஆட்சியர் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.