districts

தபால்துறை அலட்சியத்தால் சேதமடைந்த நிலையில் கிடைக்கும் சான்றிதழ்கள்

தஞ்சாவூர், ஜூலை 3 - அஞ்சல் துறை அலட்சியம் காரண மாக, பொதுமக்களுக்கு வந்து சேரும் சான்றி தழ்கள் சேதமடைந்தும், மடங்கிய நிலையி லும் கிடைக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்திய அஞ்சல் துறை அதிகளவிலான ஊழியர்களுடன் செயல்பட்டு வருகிறது. எவ்வளவோ நவீன வசதிகள் ஏற்பட்டு, முகத் துடன் முகம் பார்த்து பேசும் செல்போன் வந்து விட்டாலும் கூட, தபாலுக்காக தபால்கா ரரை எதிர்பார்த்து காத்திருக்கும் மன மகிழ்ச்சியை வார்த்தைகளில் விவரிக்க முடி யாது. தபால் துறை காலப்போக்கில் வளர்ச்சி  அடைந்து வங்கிச் சேவையிலும் ஈடுபட்டு வருகிறது. அதே நேரத்தில் கடிதங்களை இந்திய  அஞ்சல் துறை முறையாக கையாளுவ தில்லை என்ற கருத்தும் வலுவாக பொதுமக்க ளால் முன்வைக்கப்படுகிறது. இதன் காரண மாக கட்டணம் கூடுதல் என்றாலும் பரவா யில்லை என, தனியார் கொரியர் சேவை நிறு வனங்களை நோக்கி செல்ல வைக்கிறது.  குறிப்பாக, கல்லூரிகள், அரசு அலுவலகங்க ளில் இருந்து வரும் சான்றிதழ்கள் குப்பை யைப் போல், மடக்கப்பட்டும், முறுக்கப்பட் டும், சம்பந்தப்பட்டவர்களை சென்றடை கிறது. இதனை வாங்கிப் பார்ப்பவர்கள் அதிர்ச்சி அடையும் நிலை உள்ளது.

பேராவூரணி பகுதியில் சனிக்கிழமை சிதம் பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்து, ஒரு மாணவருக்கு விரைவுத் தபா லில் அனுப்பப்பட்ட சான்றிதழ், மடங்கி, கசங்கிய நிலையில், அஞ்சல் துறை முத்திரை, சான்றிதழில் பதிந்து, சான்றித ழில் அச்சிடப்பட்டிருந்த எழுத்துகள், மாண வரின் புகைப்படம் சேதமடைந்த நிலையில் கிடைத்துள்ளது.  இதனைப் பார்த்த மாணவர் மனம் வேத னைப்படும் வகையில் இருந்தது. படிப்பு  சான்றிதழ் உள்ளிட்ட மற்ற சான்றிதழ்கள் ஆண்டாண்டு காலத்துக்கும் பாதுகாக்கப்பட வேண்டிய நிலையில், புதிதாக வரும் சான்றிதழ்களே சேதமடைந்த நிலையில் கிடைப்பது சம்பந்தப்பட்டவர்களை வருத்தத் தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து தபால் துறை வட்டாரங்க ளில் விசாரித்த போது, “தபால் அனுப்பப்ப டும் இடங்களில் இருந்தே முறையாக கையாளப்படுவதில்லை. சாக்கு மூட்டையில்  அடைக்கப்பட்டு, பேருந்து நிலையம், ரயில்  நிலையங்களில் தூக்கி வீசி எறியப்படு கிறது. மழை, வெயில், பனியில் கிடந்து வீணா கும் நிலை உள்ளது. இது தபால்காரர் ஒருவரு டைய தவறல்ல. ஒட்டு மொத்த தபால் துறை யின் தவறு” என்றனர். எனவே ‘சான்றிதழ் உள்ளது. மடக்க வேண்டாம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ள தபால் களை முறையாக கையாள அஞ்சல் ஊழியர் களுக்கு உரிய பயிற்சி மற்றும் அறிவுறுத் தல் வழங்க வேண்டும். சான்றிதழ்கள் உரிய முறையில் சேதமின்றி வாடிக்கையா ளர்களை சென்றடைய தபால் துறை உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும்.  (ந.நி)