தஞ்சாவூர், மார்ச் 9 தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் சேவு கடை அருகில், பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவல கம் கட்டுவதற்கு இடம் கொடுத்தவர்களுக்கு, குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட் டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்குவதாக மாவட்ட ஆட்சியர், வட்டாட்சி யர் ஏற்றுக்கொண்ட அடிப்படையில் பயனா ளிகளுக்கு வீடுகள் ஒதுக்கிட வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பி னர் கே.ராஜகோபால் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலா ளர் என்.வி.கண்ணன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர், ஒன்றியக் குழு உறுப்பினர் பி.ராஜூ, விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் பி.பாலசுப்பிரமணியன், சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் எம்.ஜி.சர வணன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எஸ்.ராமலிங்கம் ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர். இதையடுத்து போராட்டம் நடத்தியவர்க ளுடன் பூதலூர் வட்டாட்சியர் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி, விரைவில் வீடு ஒதுக்கீடு செய்வதாக உறுதியளித்தார். இதனால் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட் டுள்ளது.