districts

சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பறிமுதல் உரிமையாளர்களுக்கு அபராதம்

தஞ்சாவூர்,  ஜூலை 20 -  இரவு நேரங்களில் சுற்றித்  திரிந்த 20-க்கும் மேற்பட்ட மாடுகளை பட்டுக்கோட்டை நகராட்சியினர் பிடித்து,  மாட்டின் உரிமையாளத் களுக்கு அபராதம் விதித்த னர்.  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகர்ப்  பகுதியில், பகல் நேரங்களி லும், இரவு நேரங்களிலும், பராமரிப்பின்றி, விபத்து களை ஏற்படுத்தும் வகை யில் அதிக அளவில் மாடு கள் சுற்றித் திரிவதாக, நகர் மன்றக் கூட்டத்தில் புகார் கள் வந்தன. மேலும், விபத்தை ஏற்படுத்தும் வகை யில் சுற்றித்திரியும் மாடு களை பறிமுதல் செய்ய வேண்டும் என சமூக ஆர்வ லர்களும் மாவட்ட நிர்வாகத் திடம் கோரிக்கை வைத்தனர்.  இதனைத் தொடர்ந்து, நகராட்சி ஆணையர் (பொ)  குமார் உத்தரவின் பேரில், துப்புரவு அலுவலர் நெடுமா றன் தலைமையில், நக ராட்சி துப்புரவு ஆய்வாளர் அறிவழகன், உதவியாளர்கள் வெற்றி,  செல்வகுமார், சுப்பிரமணி யன் மற்றும் நகராட்சி துப்பு ரவு ஊழியர்கள், நகராட்சி ஊழியர்கள், இரவு நேரங்க ளில் பழனியப்பன் தெரு, பேருந்து நிலையம், கடைத் தெரு, மார்க்கெட் போன்ற பகுதிகளில் சுற்றி திரிந்த 20-க்கும் மேற்பட்ட மாடுகளை பிடித்து, மார்க்கெட் பகுதி யில் உள்ள குடிநீர்த் தொட்டி  அருகே அடைத்து வைத்த னர்.  தொடர்ந்து, தலா 500 ரூபாய் வீதம் மாட்டின் உரி மையாளர்களுக்கு அப ராதம் விதிக்கப்பட்டது. மீண்டும் மாடுகளை பராமரிப் பின்றி தெருவில் விட்டால், கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து மாடுகளை கொடுத்து அனுப்பி  வைத்தனர்.