தஞ்சாவூர், டிச.31- மாற்றுத் திறனாளிக்கான மூன்று சக்கர ஸ்கூட்டர் கேட்டு, மனு அளித்த நிலையில், அதிகாரிகளால் கடந்த 15 ஆண்டுகளாக அலைக்கழிக்கப் படுவதாக, விபத்தில் கால்களை இழந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மீண்டும், ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டி னத்தை சேர்ந்தவர் முகமது அலி (52). இவரது மனைவி ஜாகீதா. இவர்களுக்கு முகமது இர்சாத் (17) என்ற மகனும், சாலிஹா (15) என்ற மகளும் உள்ளனர். முகமது அலி தனது 18-ஆவது வயதில் ரயில் விபத்தில் இரண்டு கால்களையும் இழந்து விட்டார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிக்கான சான்றிதழ் அட்டையும் பெற்றுள்ளார். இந்நிலையில் தன்னம்பிக்கையுடன் ஆட்டோ ஓட்டி வாழ்க்கையை நடத்தி வருகிறார். இதற்கிடையில், அரசு நலத்திட்ட உதவியாக தனக்கு மூன்று சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்க கோரி முகமது அலி மனு கொடுத்துள்ளார். இதற்காக இவருக்கு மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்பட்டதாக கூறப்ப டுகிறது. மூன்று சக்கர ஸ்கூட்டர் வழங்குவது குறித்து ஆட்சியர் அலுவலகத்திற்கு வரச் சொல்வதும் பின்னர் திருப்பி அனுப்புவது மாக உள்ளனர். இப்படியே 15 ஆண்டு கள் கடந்த நிலையில் மீண்டும் அவருக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் அழைப்பு கொடுக்கப்பட்டதாக கூறப்படு கிறது. இதற்காக தனது மகன் துணை யுடன் அதிராம்பட்டினத்தில் இருந்து, ஆட்சி யர் அலுவலகத்திற்கு வந்தவரை மீண்டும் திருப்பி அனுப்பியதால் வேதனை அடைந் துள்ளனர். இதுகுறித்து முகமது அலி கூறுகையில், ‘‘கால்களை இழந்த போது கூட இந்தள விற்கு வலி இல்லை. ஆனால், இப்படி தொடர்ந்து 15 ஆண்டுகளாக அலைக்கழிக்கின்றனர். இதுதான் பெரிய அளவில் மன வேதனையாக உள்ளது. இருந்த போதிலும் மாவட்ட ஆட்சி யர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கவனத் திற்கு எனது நிலை குறித்து தெரிந்தால் நிச்சயம் உதவி செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.