தஞ்சாவூர், மார்ச் 23 - தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையி னர் நல அலுவலகத்தின் மூலம் மின் மோட்டா ருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் சிறு பான்மையினருக்கு வழங்கப்பட உள்ளது. தையல் இயந்திரம் பெற விரும்புவோர், தையல் கலை பயின்றவராக இருக்க வேண்டும். மேலும், தையல் கலை பெற்றதற் கான உரிய சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். ஆண்டு வருமான உச்சவரம்பு ரூபாய் ஒரு லட்சமாக இருக்க வேண்டும். வயது 20 முதல் 45 வரை இருக்க வேண்டும். கைம்பெண் மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர் போன்றவர் களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஒரு முறை தையல் இயந்திரம் பெற்றிருப்பின் மீண்டும் தையல் இயந்திரம் பெற ஏழு ஆண்டுகள் கடந்த பின்னரே தகுதியுடைய வர்களாக கருதப்படுவார்கள். எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையி னர் நல அலுவலகத்தில் இருந்து உரிய விண்ணப்ப படிவங்கள் பெற்று விண்ணப்பிக் கலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.