கும்பகோணம், டிச.13- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர், வடுகபாளையத்தெரு, பகு தியில் அரசு அலுவலகங் கள், ஏராளமான குடியிருப்பு கள் உள்ளன. இந்நிலையில் அப்பகுதிக்கு மின்சாரம் சீராக செல்வதற்கு, மின்சார வாரியம் பல வருடங்க ளுக்கு முன்பு மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) அமைத் தது. இந்நிலையில் அந்த மின் மாற்றியை தாங்கி நிற்கும் மின் கம்பங்கள் மிகவும் பழு தடைந்து, மின் கம்பிகள் தொங்கியவாறு, எந்நேர மும் கீழே விழும் நிலை யில் உள்ளது. ஆனால் மின் சாரத் துறையினர், அவ்வப்போது அந்த மின்மாற்றியை பார்த்துவிட்டு கடந்து செல்கின்றனர். இதுகுறித்து பொது மக்கள் புகார் தெரிவித்தும் திருவிடைமருதூர் பேரூராட்சி நிர்வாகமோ, மின்சாரத் துறையோ எந்தவித நடவடிக்கை யும் எடுக்கவில்லை. பழுதடைந்த மின்மாற்றி கீழே விழுந்து பெரும் விபத்து ஏற்படும் முன், உடனடியாக சீரமைக்க வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவிடைமரு தூர் வடக்கு ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.