districts

img

இராமநாதபுரத்தில் ஜமாபந்தி

 இராமநாதபுரம், ஜூன் 1- இராமநாதபுரம் மாவட்டம் வருவாய் மற்றும் பேரிடர்  மேலாண்மை துறை சார்பில் இராமநாதபுரம் வட்டாசியர் அலுவலகத்தில் 1431-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் (ஜமா பந்தி) மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத் தலை மையில் ஜூன் 1 புதனன்று நடைபெற்றது.  இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 9 வருவாய் வட்டங்களில் 1431-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் (ஜமா பந்தி) ஜூன் 1 அன்று முதல் நடைபெறுகிறது.  இராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட  ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற வருவாய் தீர்வா யத்தில் (ஜமாபந்தி) பொதுமக்களிடமிருந்து 46 கோரிக்கை  மனுக்கள் பெறப்பட்டன.அதனைத் தொடர்ந்து சமூக  பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு மாதாந்திர  முதியோர் உதவித் தொகை பெருவதற்கான ஆணை யினையும், கீழ் 3 பயனாளிகளுக்கு மாதாந்திர விதவை உதவித் தொகை பெறுவதற்கான ஆணையினையும், 7 பய னாளிகளுக்கு புதிய குடும்ப அட்டையினையும், வேளாண்மைத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராமஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு வேளாண் உபகரணங்களையும் மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத் வழங்கினார்.