districts

விபத்தில் இளைஞர் பலி: உறவினர்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை, ஜன.29-  புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாட்டைச் சேர்ந்த கந்தசாமி  மகன் ரமேஷ் (30). கூலித் தொழிலாளியான இவர், ஜனவரி 22-ஆம் தேதி அதிகாலை யில் வீட்டின் அருகே சாலையோரத்தில் நடந்து சென்றபோது அடையாளம் தெரி யாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில், இறந்த ரமேஷ்க்கு 8-ம்  நாள் சடங்குக்காக அவரது வீட்டுக்கு உற வினர்கள் ஏராளமானோர் ஞாயிற்றுக் கிழமை வந்தனர். அஞ்சலிக்கு வந்த உற வினர்கள், விபத்தை ஏற்படுத்திய வாக னத்தைக் கண்டுபிடிக்காத காவல்துறை யினரைக் கண்டித்தும், ரமேஷின் குடும்பத்  தினருக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி யும் சாலை மறியல் ஈடுபட்டனர்.  தகவலறிந்து வந்த ஆலங்குடி வட்டாட்சி யர், காவல் துணைக் கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து மறி யலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.