districts

img

மறமடக்கியில் ஜல்லிக்கட்டு: 26 பேர் காயம்

புதுக்கோட்டை, ஏப்.11 - புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மறமடக்கியில் முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை மாவட்ட ஆட்சி யர் கவிதாராமு தலைமையில் சுற்றுச் சூழல், இளைஞர்நலன் மற்றும் விளை யாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநா தன் தொடங்கி வைத்தார். போட்டியில், புதுகை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 641 காளை கள் அவிழ்த்துவிடப்பட்டன. 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் அடக்கினார். ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டிய தில் 26 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்க ளுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பலத்த காயமடைந்த 14 பேர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காளைகளை அடக்கிய வீரர்க ளுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையா ளர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங் கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருள்கள்  வழங்கப்பட்டன. போட்டியை அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முக நாதன், ஒன்றியக்குழு உறுப்பினர் சுமதி மெய்யநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் பார்வையிட்டனர்.