districts

வெள்ளாற்றில் மணல் அள்ள அரசு அனுமதிக்க வேண்டும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

அறந்தாங்கி, அக்.28 - புதுக்கோட்டை மாவட் டம் ஆவுடையார்கோவில் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அறந்தாங்கி ஆர்டிஓ சொர்ணராஜ் தலைமை வகித்தார். ஆவு டையார்கோவில் தாசில்தார் வில்லியம்ஸ் மோசஸ், மண மேல்குடி தாசில்தார் ராஜா, அறந்தாங்கி தாசில்தார் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆவுடையார்கோவில் யூனியன் அலுவலகத்திற்கு மூன்று இலவச டிராக்டர்கள் வந்திருப்பதாகவும் அதை  விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், ஒரு மணி நேரத்திற்கு 500  ரூபாய் வாடகை கொடுத்து  பயன்படுத்திக் கொள்ள லாம். மறவனேந்தல், சாத்தி யடி போன்ற கிராம கண்மாய்களை ஆழப் படுத்த வேண்டும். ஆவுடை யார்கோவில் யூனியன் அலு வலர், கோடியக்கரையில் சுமார் 200 ஏக்கர் நிலம் உள்ள தாகவும், அதில் தேவை யற்ற மரங்களை அப்புறப் படுத்தி தேவையான மரங்களை நட வேண்டும்.  அறந்தாங்கி சர்க்கரை ஆலை அருகே உள்ள 100  ஏக்கர் பரப்பில் உள்ள தைல  மர காடுகளை அப்புறப் படுத்தி, மழை தரும் மரங் களை வளர்க்க வேண்டும். பழந்தாமரை கண்மாய் பகுதியில் கழிவுநீர் நஞ்சை  நிலத்திற்குள் பாய்வதாக வும், அதனால் விவசாயம் செய்ய முடியவில்லை. இரும்பா நாடு கண்மாய்க்கு சிவகங்கையில் இருந்து தண்ணீர் வர வேண்டும். அதுவரை வரக்கூடிய வாரி தூர்வாரப்படாமல் உள்ளது. எனவே அதனை தூர்வார வேண்டும். ஒக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மழை காலங்களில் தண்ணீர்  அதிகமாக தேங்குவதால் மாணவர்கள் படிக்க முடிய வில்லை. வெள்ளாற்றில் மணல் அள்ள அரசு அனுமதி தர வேண்டும். மணல் குவாரிகள் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த அனைத்து கோரிக் கைகளும் விரைவில் நிறை வேற்றப்படும் என்று ஆர்டிஓ  முன்னிலையில் துறை சார்ந்த அதிகாரிகள் பதில ளித்தனர்.