புதுக்கோட்டை, ஜன.9- புதுக்கோட்டையை அடுத்த இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீருக்கான மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலந்த வர்களை உடனடியாக கைது கைது செய்ய வேண்டுமென தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டக் குழுக்கூட்டம் மாவட்டத் தலை வர் ராசி.பன்னீர்செல்வன் தலைமையில் புதுக்கோட்டையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எம்.ஸ்டாலின் சரவணன், மாநில குழு உறுப்பினர் இரா. தனிக்கொடி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகி கள், மாவட்ட குழு உறுப்பினர்கள் பங்கேற்ற னர். மாவட்ட பொருளாளர் கி ஜெயபாலன் நன்றி கூறினார். கூட்டத்தில், புதுக்கோட்டையை அடுத்த இறையூர் வேங்கையர் வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனித மலத்தைக் கலந்துள்ள னர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து இறையூர் கிராமத்தில் தீண்டா மையை கடைபிடித்த இருவர் மீது வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து நடவடிக்கை எடுத்திருப்பது பாராட்டுகிறது. அதே நேரத்தில், பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனித மலத்தைக் கலந்த சம்பவம் நடந்து 10 நாட்க ளுக்கும் மேலாகியும் குற்றவாளிகள் இது வரை கைது செய்யப்படவில்லை. இது தமி ழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் சமூக விரோதிகளால் விடப்பட்ட சவாலாக கருதப்படுகிறது. எனவே தமிழ்நாடு அரசும் புதுக் கோட்டை மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த வர்களை உடனடியாக கைது செய்து நட வடிக்கைக்குட்படுத்த வேண்டும்’’ என தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.