districts

கல்யாணசுந்தரம் மணிமண்டபத்தில் நூலகம் அமைக்க தமுஎகச வலியுறுத்தல்

தஞ்சாவூர், மே 30-  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் பட்டுக்கோட்டை கிளையின் 15 ஆவது மாநாடு ஞாயிறன்று ஹோட்டல் மெரினா அரங்கத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு தலைவர் முருக.சரவணன் தலைமை வகித்தார். மாநாட்டினை மாவட்ட துணைத் தலைவர் தி.தனபால் துவக்கி வைத்து உரையாற்றினார். செயலாளர் மோரீஸ் அண்ணாதுரை வேலை அறிக்கை, பொருளாளர் கே.பக்கிரிசாமி வரவு-செலவு அறிக்கையை முன்வைக்க அதன் மீதான விவாதங்கள் நடைபெற்று தொகுப்புரை வழங்கப்பட்டது. மாநாட்டில் கிளைத் தலைவராக முருக.சரவணன், செயலாளராக மோரீஸ் அண்ணாதுரை, பொருளாளராக கே.பக்கிரிசாமி, துணைத் தலைவர்களாக தி.வாஞ்சிநாதன், சிவ.ரவி, என்.கந்தசாமி,  துணைச் செயலாளர்களாக கோ.ஆறுமுகம், பாக்யபாலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.   காசாங்குளம் வடகரை அண்ணா அரங்கம், அதன் வளாகம் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட இடம். ஆனால் இந்த இடம் கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பொதுக்கூட்டங்கள் நடத்த முடியாமல் இடர்ப்பாடு எழுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணா கிளை நூலகத்தில் நாளுக்கு நாள் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புத்தகங்களும் அதிகமாக வெளிவருகின்றன. இதனால் இடப்பிரச்சனை ஏற்படுகிறது. எனவே நூலகத்துறை விரிவடைந்த நூலகமாக மாற்ற வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மக்கள் கவிஞர் கல்யாண சுந்தரம் மணிமண்டபத்தில் உள்ள புகைப்படங்கள் மழைநீர் வடிந்து அழிந்துள்ளன. மழைநீர் உள்ளே புகாதவாறு அழிந்த புகைப்படங்களை மாற்றி புதிய படங்களை நிறுவ வேண்டும்.   அரசுப்பணித் தேர்வுக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ள இங்கு வந்து படிக்கின்றனர். அப்படி வருபவர்களுக்கு உதவும் வகையில் சிறு நூலகம் ஒன்றை அமைக்க வேண்டும். குழந்தைகள் பூங்காவை விரிவுபடுத்தி நிறைய விளையாட்டு உபகரணங்கள் நிறுவ வேண்டும். மேலும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.