districts

img

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஏப்.3-  சத்துணவு ஊழியர் களுக்கு காலமுறை ஊதி யம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9000 வழங்க வேண்டும். பணிக்கொடை ரூ.15 லட்சம்  வழங்க வேண்டும். காலிப்  பணியிடங்களை நிரப்ப வேண்டும். காலை சிற்  றுண்டி திட்டத்தை சத்து ணவுத் திட்டத்துடன் இணைக்க வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட் டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்  நாடு சத்துணவு ஊழியர்  சங்க ஒன்றியத் தலைவர்  ஜெயலலிதா தலைமை வகித்தார். மாவட்டப் பொரு ளாளர் க.பிச்சைமுத்து, அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் கருப் பையா, சத்துணவு ஊழியர் சங்க ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில், திரு வரங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு அரசு ஊழியர்கள் சங்க மாவட்டச் செயலாளர் வேல்முருகன் தலைமை வகித்தார். இதில், தா.பழூர் ஒன்றியத்திற்குட்பட்ட சுமார் 30-க்கும் மேற்பட்ட சத்து ணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.