புதுக்கோட்டை, பிப்.10- புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சி 13-வது வார்டில் மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஜோ.அஞ்சலிதேவி போட்டியிடுகிறார். இவரின் வெற்றிக்காக திமுக மாவட்ட செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவி வர்மன், திமுக ஒன்றிய செயலா ளர் கே.சந்திரன், நகர செயலா ளர் எம்.எஸ்.அக்பர்அலி, சிபிஐ மாநில குழு உறுப்பினர் கே.ஆர். தர்மராஜன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.சண்முகம், துரை.நாராயணன், மாவட்டக் குழு உறுப்பினர் டி.சலோமி, ஒன்றிய செயலாளர் எம்.ஆர்.சுப்பையா, சிபிஐ ஒன்றிய செய லாளர் விஜயரங்கன், காங்கிரஸ் நகரத் தலைவர் அப்துல்கரீம், விடுதலை சிறுத்தைகள் நகர செயலாளர் சி.முருகன் மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்கு சேகரிப்பின் போது வேட்பாளர் அஞ்சலிதேவி, நான் வெற்றிபெற்றால் அன்னவாசல் பேரூராட்சிக்கு தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் நூறு நாள் வேலைத்திட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுப் பேன். இந்த வார்டில் உள்ள சமுதாய கூடத்தை திருமண மண்டபமாக தரம் உயர்த்தி கட்டித்தர நடவடிக்கை எடுப்பேன். இந்தப் பகுதி பெண்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டித் தர நடவடிக்கை எடுப்பேன். இளைஞர்களை விளையாட்டுத்துறையில் வளர்த்தெடுக்கும் வகையில் விளையாட்டு மைதானம் அமைத்துக் கொடுப்பேன். இந்த பகுதியில் விரிவாக்கம் பெற் றுள்ள பகுதியில் புதிய சாலை கள் அமைக்கவும், பழுதடைந்த சாலைகளை சீரமைக்கவும் நட வடிக்கை எடுப்பேன். குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார்.