districts

img

தெருமுனைக் கூட்டம்

புதுச்சேரி, ஜூலை. 25- புதுச்சேரி மாநிலம் வம்புபட்டு பகுதி மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. புதுச்சேரி திருபுவனை தொகுதிக்குட்பட்ட வம்புபட்டில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை உருக்கும் தொழிற்சாலையை அப்புறப்படுத்த வேண்டும், சாலைகளை சீரமைத்து வாய்க்கால் வசதி ஏற்படுத வேண்டும். அங்கன்வாடி கட்டிடத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. வம்புபட்டு மாரியம்மன் கோவில் எதிரில் நடைபெற்ற கூட்டத்திற்கு கட்சியின் மண்ணாடிபட்டு கொம்யூன் கமிட்டி செயலாளர் ரகு.அன்புமணி தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம், கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வடிவேல், மாநிலக் குழு உறுப்பினர் சங்கர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். கொம்யூன் கமிட்டி உறுப்பினர்கள் விநாயகம், தட்சிணாமூர்த்தி, முத்து, நாகராஜ், கந்தநாதன், அமிர்த வள்ளி, முருகன், ராமலிங்கம் உள்ளிட்ட அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.