புதுச்சேரி, அக்.20- மாற்றுத் திறனாளிகளின் கடைகளை இடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையோர கடைகளை இடித்த அதிகாரிகள் மீது மாற்றுதிறனாளிகள் நலச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட மாற்று திறனாளிக ளுக்கு மாற்று இடத்தை அரசு உடனே வழங்க வேண்டும், தமிழகத்தை பின்பற்றி மாற்றுத்திறனாளிகள் நடைபாதையில் போக்கு வரத்திற்கு பாதிப்பில்லாமல் கடை களை அமைத்துக் கொள்ள அர சாணை வெளியிட வேண்டும், கடைகள் அகற்றப்பட்டதால் வாழ்வாதாரம் இழந்துள்ளள சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், போக்குவரத்துக்கு பாதிப்பில்லாமல் இயங்கும் சாலையோரா கடைகளை அகற்றுவதை அரசு உடனே கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி இப்போராட்டம் நடை பெற்றது. புதுச்சேரி சட்டப்பேரவை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மாற்றுத் திறனாளி கள் சங்கங்களின் ஒருங்கி ணைப்பாளர் எஸ்.மாயவன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். சிஐடியு பிரதேச தலைவர் பிரபுராஜ், பிரதேச செயலளார் சீனுவாசன், காதுகேளாதோர் சங்க பிரதேச தலைவர் சரவணன், செயலாளர் பாஷித், சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்க பிரதேச செயலாளர் வடிவேல் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக காமராஜர் சிலை அருகில் இருந்து ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியில் சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்த சங்கத்தின் தலைவர்களிடம் அதிகாரிகளை அழைத்து பேசி உரிய தீர்வு காண்பதாக தெரிவித்தார்.