புதுச்சேரி, ஜன.14- புதுச்சேரி போக்குவரத்து துறை விதித்த கூடுதல் அபராத கட்டணத்தை எதிர்த்து சிஐடியு தொடுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. புதுச்சேரி அரசின் போக்கு வரத்து துறை, ஒன்றிய அரசின் உத்தரவை காட்டி புதுச்சேரியில் இயங்கும் 15 ஆண்டுகள் முடிந்த அனைத்து மோட்டார் வாகனங்களுக்கு (எப்.சி) புதுப்பித்தலுக்கான கட்டணம் மற்றும் காலதாமத அபராதம் கட்டணம், வாகனப் பதிவிற்கான கட்டணங்களை பண் மடங்கு உயர்த்தியது. இந்த கட்டண உயர்வால் ஆட்டோ மற்றும் இலகுரக வாகன ஓட்டுநர்கள், உரிமை யாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த கட்டண உயர்வை எதிர்த்து சிஐடியு புதுச்சேரி பிரதேச ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் துணை தலைவர் ஜி.சினுவாசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை ஜனவரி 12ஆம் தேதி தலைமை நீதிபதி ராஜா, பரத் சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு சிஐடியு தரப்பில் ஆஜாராகி வாதாடினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அபராத கட்டணம் வசூல் செய்ய தடை விதித்தார். இந்த தடை ஆணையின் மூலம், ஆட்டோக்கள் எப்சி புதுபிப்பு கட்டணம் ரூ.4,400 என்பது ரூ.700 ஆக குறை யும். டாட்டா ஏசி. வேன். டெம்போ. டாக்சி போன்ற வாக னங்களுக்கு ரூ.8,400 என்பது ரூ. 700 என குறையும். பஸ், லாரி. டாரஸ் போன்ற கனரக வாக னங்களுக்கு சுமார் ரூ.12,000 என்பது ரூ.1,600 என குறையும். மேலும் ஒரு நாள் காலதாமத அபராதம் ரூ.50. என்பது அனைத்து வாகனங்களுக்கும் ரத்தாகும். இவ்வழக்கில் ஆஜாராகி தடை ஆணை பெற்று தந்த வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யுவிற்கு சிஐடியு ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் நன்றியும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாக சங்கத்தின் செய லாளர் ஆர்.விஜயகுமார் தெரி வித்துள்ளார்.