பெரம்பலூர், டிச.9 - தமிழ்நாடு அரசு ரேசன் கடை பணியா ளர்கள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் எளம்பலூ ரில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப் பாளர் ராஜிவ் வரவேற்றார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.விஜயபாரதி தலைமை வகித்தார். மாவட்டப் பொருளா ளர் கருணாமூர்த்தி நன்றி கூறினார். தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது போல், ரேசன் கடைகளுக்கு தனித்துறை ஏற்படுத்திட வேண்டும். ரேசன் கடை பணியாளர்களுக்கும் பொதுநிலை திறன் காமன்கேடர் கொண்டு வர வேண்டும். பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதி யம் வழங்குவதற்குரிய அரசாணையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.