பழனி, ஜூன் 7- பழனி அருகே சின்னக்கலை யம்புத்தூர் ஊராட்சியில் போலி பத்திரம் மூலம் பொதுமக்களுக்கு சொந்தமான காலி இடத்தை அப கரிக்கும் முயற்சியை கண்டித்து ஜூன் 7 அன்று பேருந்து நிலையம் அரு கில் சிஐடியு பஞ்சாலை சங்க மாவட்ட தலைவர் ஆர். ஈஸ்வரன் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழனி வட்டம் சின்னக்கலை யம்புத்தூர் கிராமம் நரேந்திரதேவ் நகரில் வசிக்கும் இளையோர்களின் வளர்ச்சிக்காகவும் கல்வி மேம் பாட்டிற்காகவும் சர்வே எண் 119/2ல் உள்ள 60 சென்ட் மனை நிலத்தை ஆவண எண் 1235/1970ன்மூலம் இனாம் சாசனமாக ஜே.கே. சுப்புராயலுநாயக்கர் அவர்களால் வழங்கப்பட்டு பொதுப்பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலத்தை போலி யான ஆவணங்கள் தயார் செய்து, பத்திரபதிவு செய்து கொடுத்த பதிவு துறையையும் பட்டா மாறுதல் செய்து கொடுத்த வருவாய்த்துறையையும் கண்டித்தும் உடனே பட்டாவையும் பத்திரபதிவையும் ரத்து செய்யுமாறு நரேந்திரதேவ்நகர் மக்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். சிபிஎம் பழனி ஒன்றியசெயலாளர் பி.செல்வ ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எஸ்.கமலக்கண்ணன் ஹெச்எம்எஸ் சங்கத்தின் வி. சுப்பு ராயலு. ஜி. பங்காரு(எ) குருசாமி, சிஐடியு கன்வீனர் கே. பிச்சைமுத்து மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.