districts

img

சிறுவர் நீச்சல்குளம் பயன்பாட்டுக்கு வந்தது

நாகர்கோவில், பிப்.3- திற்பரப்பு அருவி பகுதியில் செயல்படாமல் இருந்த அலங் கார நீரூற்று மற்றும் சிறுவர் நீச்சல் குளம் செயல்பாட்டுக்கு வந்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தரும் சுற்றுலாத் தலங்க ளில் ஒன்றான திற்பரப்பு அருவி யில் அலங்கார நீரூற்று பழுத டைந்தும், சிறுவர் நீச்சல் குளம் தண்ணீர் நிரப்படாமலும், அடிப்படை வசதிகளும் செய்யப் படாமலும் இருந்தது. இது தொடர் பாக நடவடிக்கை எடுக்க வேண் டும் என சமூக வலைதளங்களில் வலியுறுத்தப்பட்டு வந்தது.  இந்தநிலையில் திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சிறுவர் பூங்காவில் பழுதடைந்த அலங்கார நீரூற்று சீரமைக்கப் பட்டு இயக்கப்பட்டது. சீரமைக் கப்பட்ட அலங்கார நீரூற்றில் தண்ணீர் விழும் அழகை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர். இதேபோல், சிறுவர் நீச்சல் குளத்துக்கு தண்ணீர் கொண்டு வரும் குழாய்களில் சேதமடைந்த பகுதிகள் சீர மைக்கப்பட்டு தண்ணீர் நிரப்பப் பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகள், சிறுவர் நீச்சல் குளத்தில் உற்சாகத்துடன் நீந்தி மகிழ்ந்தனர்.