நாகப்பட்டினம், ஏப்.9- நாகப்பட்டினம் மாவட்டம் சாமந்தன் பேட்டை கடற்கரை கிராம மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை பரிசீலித்து மினி மீன்பிடித் துறைமுகம் அமைக்க தமிழக அரசு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. சாமந்தன்பேட்டையில் 500-க்கும் மேற் பட்ட குடும்பங்கள் வசித்து வருவதுடன், மீன் பிடித் தொழிலையே நம்பி வாழ்கின்றனர். கிட்டத்தட்ட 170 இயந்திரப் படகுகள், 26 இயந்திரப் படகுகள் மீன்பிடிக்கப் பயன் படுத்துகின்றனர், அவற்றை அக்கரைப் பேட்டை மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்து கின்றனர். இந்த நிலையில் சாமந்தன்பேட்டை மீன வர்கள் தங்கள் பகுதியில் மீன்பிடித் துறை முகம் அமைக்க வேண்டுமென பல ஆண்டு களாக கோரிக்கை விடுத்து வந்தனர். சமீபத் தில், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், சட்டமன்றத் தில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, சாமந்தன்பேட்டையில் புதிய மினி மீன்பிடி துறைமுகம் கட்ட, மாநில அரசு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யும் என அறி வித்தார். நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ. முகமது ஷா நவாஸ், சில மாதங்க ளுக்கு முன்பு கூறியதாவது: சென்னையி லுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம், மினி மீன்பிடித் துறைமுகம் அமைப்ப தற்கான சாத்தியக்கூறு ஆய்வை மேற் கொண்டு அதன் அறிக்கையை சமர்ப்பித் தது, அதன் அடிப்படையில் அரசு அனு மதி வழங்கியுள்ளது. புதிய துறைமுகம் அக்கரைப் பேட்டையில் நெரிசலைக் குறைக் கும். சாமந்தன்பேட்டை மீனவர்களுக்கு நிலையான வாழ்வாதாரமும் கிடைக்கும். சாமந்தன்பேட்டை துறைமுகம் கப்பல்துறை, மீன் இறங்கு மையம் மற்றும் குளிர்பத னக் கிடங்குவசதிகள் ஆகியவற்றுடன் அமைக்கப்படும்.
தற்போது நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டையில் ஒரு பெரிய மீன்பிடி துறைமுகமும், நம்பியார் நகரில் நடுத்தர மீன்பிடி துறைமுகமும் உள்ளது. கடந்த அர சால் வெள்ளப்பள்ளத்தில் ரூ.100 கோடி யிலும், ஆற்காட்டுத்துறை ரூ.150 கோடியி லும் கட்டப்பட்டு வரும் மீன்பிடித் துறைமுகத் தின் கட்டுமானப் பணிகள் முறையே 33 சத வீதமும் 62 சதவீதமும் நடைந்துள்ளது என் றார். கீச்சாங்குப்பம், பட்டினச்சேரி மீனவர் கிராமங்களில் கரையோர அரிப்பைத் தடுக் கும் வகையில், மதகுகள் அமைக்க, அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக ரூ.14 கோடி ஒதுக்கியுள்ளதாக, தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டுக் கழகத் தலைவர் என். கௌதமன் தெரிவித்தார். நபார்டு வங்கியின் ஊரக உள்கட்ட மைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் நம்பியார் நகர் துறைமுகத்தில் 60 சதவீத பணிகள் நிறை வடைந்துள்ளன. வேளாங்கண்ணியில் ரூ.3 கோடி ரூபாய் மதிப்பில் கல் சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.