நாகப்பட்டினம், ஜூலை 13- நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதி களில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திட்ட பணிகளை ஆய்வு செய்தார். அப்போது கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி உடனிருந்தார். நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தொகுதிக்கு உட்பட்ட பிரதாபராமபுரம் ஊராட்சியில் அரசு வீடு கட்டும் திட்டத்தை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பார்வை யிட்டார். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நெகிழி கழிவு மற்றும் நறுக்கும் திட்டத்தையும், கூட்டாண்மை சமூக பொறுப்பு நிதியின் கீழ் பெரிய ஏரி, குளம் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதையும் பார்வையிட்டனர். இந்நிகழ்வில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி, ஊரக வளர்ச்சி துறை செயலாளர் பெ.அமுதா, நாகை மாவட்ட ஆட்சியர் மரு.அருண் தம்புராஜ் மற்றும் அரசு அதிகாரிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கீழ்வேளூர் தொகுதிக்கு தேவையான திட்டங்கள் குறித்து கோரிக்கை மனு கொடுக் கப்பட்டது.