districts

img

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு நிறைவு

நாகப்பட்டினம், மே 21 - தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் சனிக்கிழமை நடைபெற்று முடிந்தன. நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் 27 மையங்களில் நடைபெற்றன. 8598 தேர்வர்கள் பதிவு செய்திருந்தனர். 2485 ஆண் தேர்வர்கள், 4822 பெண் தேர்வர்கள் என மொத்தம் 7307 பேர் தேர்வு எழுதினர். நாகப்பட்டினம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் அருண் தம்புராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கடபிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இத்தேர்வுக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 11,787 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 1,738 பேர் தேர்வு எழுத வரவில்லை. 
புதுக்கோட்டை
புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி மற்றும் புதுக்கோட்டை மௌண்ட் சியோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில்  மாவட்ட ஆட்சியர் கவிதாராமு ஆய்வு செய்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் 58 இடங்களில் அமைக்கப்பட்ட 82 தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வினை 19,612 பேர் எழுதினர். 3,009 பேர் தேர்விற்கு வரவில்லை என ஆட்சியர் தெரிவித்தார். திருவாரூர் மாவட்டத்தில் 16,312 பேர் விண்ணப்பித்திருந்தனர். 14192 பேர் தேர்வினை எழுதினர்.