districts

img

உதவி அலுவலர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை மகளிர் திட்ட அலுவலரை கண்டித்து அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், பிப்.25 - நாகப்பட்டினம் உதவி திட்ட அலுவலர்க ளுக்கு மட்டும் ஊதியம் வழங்காத மகளிர் திட்ட அலுவலரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் பா. ராணி தலைமையில் நடைபெற்றது. 2013 ஆம் ஆண்டு மகளிர் திட்டத்தில் 70  உதவி திட்ட அலுவலர்கள் ஒப்பந்த அடிப்படை யில் நியமனம் செய்யப்பட்டனர். ஆண்டிற்கு ஒருமுறை ஒப்பந்தம் என்ற அடிப்படையில் ஆண்டுகள் புதுப்பிக்கப்பட்டது. இவர்களை பணி நிரந்தரம் செய்ய கோப்புகள் தயாரிப்பு  செய்யப்பட்ட சூழலில் ஆட்சி மாற்றம் ஏற்பட் டது. இப்போது அதற்கான காலம் கனிந்து வந்துள்ளதாக கூறுகின்றனர். ஒப்பந்தம் நீட்டிக்கும் நடைமுறை கைவிடப்பட்ட நிலையில், இதர 37 மாவட்டங்களில் இவர்க ளுக்கு ஊதியம் வழங்கபடுகிறது. ஆனால் நாகை மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் ஒப்பந்தம் நீட்டிப்பு செய்து கொடுத்தால் மட்டுமே ஊதியம் வழங்க இயலும் என்று கூறு கிறார்.  இங்கு மட்டும் 3 நபர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. செய்த வேலைக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும். மாநிலம் முழுவதும் ஒரே நடைமுறை பின்பற்றப்பட சென்னையில் உள்ள மாநில திட்ட அலு வலர் தகுந்த உத்தரவு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் அ.தி.அன்பழகன் விளக்க உரையாற்றினார். நாகை தொழிற்சங்க  கூட்டமைப்பு தலைவர் சு.சிவகுமார் நிறை வுரையாற்றினார். சிஐடியு மாவட்டச் செயலா ளர் கே.தங்கமணி, மாவட்ட பொருளாளர் அந்துவன்சேரல் ஆகியோர் கலந்து கொண்ட னர்.